ஒரு புறம் குண்டு மழை!!மறுபக்கம் அமில மழை!! நரக வேதனை அனுபவிக்கும் ஈரான் மக்கள்!!
ஈரான் மீது கடந்த 10 நாட்களுக்கு மேலாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவம் கூட்டாக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.
தெஹ்ரான், மார்ச் 9: ஈரான் மீது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றன. போர் தொடங்கிய முதல் நாளிலேயே தெஹ்ரான் மீது கனரக தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தனது குடும்பத்தினருடன் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக ஈரான் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
முதலில் ராணுவ மற்றும் அணு மையங்களை இலக்காகக் கொண்டிருந்த தாக்குதல் இப்போது ஈரானின் பொருளாதார வளங்களை குறிவைத்துள்ளது. கடந்த மார்ச் 7-ஆம் தேதி இஸ்ரேல் போர் விமானங்கள் தெஹ்ரான் மற்றும் அல்போர்ஸ் நகரங்களில் உள்ள 4 எரிபொருள் சேமிப்பு கிடங்குகளை தாக்கின.
இதையும் படிங்க: இரக்கம் காட்டாத ஈரான்!! பலமான பதில் தாக்குதல்!! அமெரிக்க வீரர்கள் பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு!
இதில் பயங்கர தீப்பிடித்து எரிந்தன. ஹைட்ரோகார்பன் கலந்த நச்சு புகை நகரம் முழுவதும் பரவி வானத்தை மூடியது. இந்த புகையை சுவாசித்த மக்களுக்கு கண் எரிச்சல், தொண்டை வலி, சுவாசக் கோளாறு ஏற்பட்டது.
நேற்று காலை தெஹ்ரானில் அமில மழை பெய்தது. ஹைட்ரோகார்பன், சல்பர், நைட்ரஜன் ஆக்ஸைடுகள் கலந்த நச்சு மழைத்துளிகள் கார்கள், கட்டடங்கள் ஆகியவற்றை சேதப்படுத்தின. ஈரான் ரெட் கிரசென்ட் சொசைட்டி (சிவப்பு பிறை சங்கம்) "இந்த மழை மிகவும் ஆபத்தானது. தோல் எரியும், நுரையீரல் பாதிக்கும்" என்று எச்சரித்தது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், ஏர் கண்டிஷனர்களை இயக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியது.
தெஹ்ரானில் மட்டும் 1 கோடி மக்கள் வசிக்கின்றனர். நச்சு புகை மேகங்களுடன் கலந்ததால் அமில மழை ஏற்பட்டது. வேளாண் வல்லுநர்கள் "இந்த மழை மண்ணில் கசிந்து தாவரங்களுக்கு நச்சுத்தன்மை ஏற்படுத்தும்" என்று கவலை தெரிவித்துள்ளனர். நகரம் முழுவதும் கருப்பு புகை மூட்டம், சாம்பல் படிந்த சாலைகள், கருப்பு மழைத்துளிகள் என்று பயங்கர காட்சிகள் நிலவுகின்றன.
இஸ்ரேல் இந்த தாக்குதலை "ஈரான் ராணுவத்துக்கு எரிபொருள் வழங்கும் கிடங்குகள்" என்று கூறியுள்ளது. ஈரான் தரப்பில் "பொதுமக்களை பாதிக்கும் கொடூரமான தாக்குதல்" என்று கண்டனம் தெரிவித்துள்ளது. போர் தொடர்ந்தால் உலக எண்ணெய் சந்தை மேலும் பாதிக்கப்படும் என்ற அச்சம் நிலவுகிறது. தெஹ்ரான் மக்கள் இப்போது நச்சு காற்று, அமில மழை என்ற இரட்டை அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இதுலாம் ஒரு பிரச்னையா? அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலை! ட்ரம்ப் அசால்ட் பதில்!