"உச்சந்தலையில் பேரிடி..கூட்டணி உடையும்"... தேமுதிக இணைவு குறித்து திருமா கொடுத்த ரியாக்ஷன்...!
திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. பாஜக, அதிமுக தலையில் இடி விழுந்துள்ளது என திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி விழுப்புரம் சாலையில் அம்பேத்கர் மக்கள் கட்சி இணைப்பு மற்றும் சட்டமன்றத் தேர்தலுக்கான நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்பொழுது அவர் பேசுகையில்:
ரஜினி திரைப்படத்தில், ஒரு முறை சொன்னால், நூறு முறை சொல்ற மாதிரி என கூறுவது போல விடுதலை சிறுத்தைகள் ஒரு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றால் நூறு பேர் வெற்றி பெற்றதற்கு சமம். தொகுதிகள் ஆறு, எட்டு என உயர்வதால் திருமாவளவன் முதலமைச்சராக போவதில்லை.
எடப்பாடி.பழனிச்சாமியிடம் பெறும் அதனைத்து தொகுதியிலும் வெற்றி பெற்றாலும் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தருவாரா?. இரணடரை ஆண்டுகள் நீங்கள் முதல்வர், இரண்டரை ஆண்டுகள் நாங்கள் முதல்வர் என பகிர்ந்தளிக்க தயாராக இருப்பாரா? என கேள்வி எழுப்பினார். திமுக கூட்டணியை பலவீனப்படுத்துவது பாஜகவின் செயல் திட்டங்களில் ஒன்று. தேர்தல் நெருங்கிவிட்டது நம்முடைய கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டையும், இந்தியா, அரசியலமைப்புச் சட்டத்தையும் பாதுக்காக்க முடியும்.
இதையும் படிங்க: அரசியலில் திருப்புமுனை... திமுக கூட்டணியில் தேமுதிக...! ஒரே வார்த்தையில் முடிச்சிட்டாரு இபிஎஸ்..!!
இன்றைக்கு தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. இதனை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். பாஜகவினர் கதறுகிறார்கள். தேமுதிக, பாஜகவினருடன் செல்வார்கள் என எதிர்பார்த்தனர். எடப்பாடி பழனிச்சாமிக்கு இடியே விழுந்திருக்கும். அவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார். இது தேமுதிக எடுத்த அரசியல் என்பதை விட, ஸ்டாலின் எடுத்த ராஜதந்திரம். ஸ்டாலின் எடுத்துள்ள இந்த நிலைப்பாடு தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை அல்ல, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐந்தாயிரம் கொடுப்பார்கள் என்றும் யாரும் எதிர்பார்க்கவில்லை. அது முதலில் அடிவயிற்றில் விழுந்த இடி, இது உச்சந்தலையில் விழுந்த இடி. அதிமுக பாஜக கூட்டணி நிலை குலைந்து போய்யுள்ளது. இந்தியாவிலேயே கட்டுக்கோப்பாக ஒரு கூட்டணி இருக்கிறது என்றால் அது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தான்.
விசில் அடித்து நம்மை அழைத்தார்கள். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தருவோம் என கூறினார்கள். அதை எங்களாலேயே உருவாக்கிக் கொள்ள முடியும் அதற்கான காலம் கனியும். எதிர்காலத்தில் அதிகார பகிர்வையும் வென்றெடுக்க முடியும். ஆனால் அதற்கான காலம் தற்போது இல்லை என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம்.
எனவே காங்கிரஸ் தோழமை என்ற உணர்வோடு கேட்கிறது அது தவறில்லை அதனாலேயே இந்த அணி உடையும் என எதிர்பார்த்தார்கள். எதிர்பார்த்தவர்களின் மண்டை உடையும்படி தேமுதிக திமுக கூட்டணிக்கு வந்துள்ளது. நம்முடைய கூட்டணி நாளுக்கு நாள் வலிமையடைந்து வருகிறது.
எதிர்க்கட்சிகள் இன்னும் ஒன்று சேரவில்லை. விஜயை தேடி ஒரு கட்சியும் சென்று சேரவில்லை. ஏற்கனவே கூட்டணியில் இருந்த கட்சிகளும் அதிமுக கூட்டணியில் சேர தயக்கம் காட்டுகின்றன.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் அங்கம் வகிக்கும் கூட்டணி வலதுசாரிகளை, சனாதன சக்திகளை இந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கும் வலிமையுள்ள கூட்டணி வெற்றி என்ற செய்தி வரலாற்றில் பதிவாக வேண்டும்.
திருமாவளவன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கதர் சட்டை கிழியும் அளவுக்கு காங்கிரஸில் பிரச்சனை… திமுக எதையும் கண்டுக்கல..!! வைகோ பேட்டி..!!!