×
 

எங்களை ஒதுக்கப் பார்த்தாலும் நாங்களே மையம்... சூசகமாக பேசிய திருமாவளவன்!!

எங்களை நோக்கி நாற்காலிகள் வரும் என என விசிக தலைவர் திருமாவளவன் சூசகமாக பேசியுள்ளார்.

சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்த விவாதங்கள் தற்போதே சூடாக நடைபெற்று வருகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, சிபிஎம், விசிக, கொமதேக, முஸ்லீம் லீக், மமக, தவாக உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்து வருகின்றன. இந்த கூட்டணிக்குள் முரண்பாடுகள் எதுவும் இல்லை என்பதால் வரும் சட்டமன்றத் தேர்தலிலும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிராக திருச்சியில் இன்று விசிக சார்பில் மதச்சார்பின்மை காப்போம் பேரணி நடைபெற்றது. திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் தொடங்கி, சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு பேரணி நடைபெற்றது. இதனையொட்டி, வழிநெடுகிலும் கட்சிக் கொடிகளும், பிரம்மாண்ட பேனர்களும் அமைக்கப்பட்டிருந்தன.

இதையும் படிங்க: நீலமயமான திருச்சி.. தொண்டர்கள் புடைசூழ திருமா மதச்சார்பின்மை பேரணி..!

இந்தப் பேரணியைத் தொடர்ந்து நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து, விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டு அரசியலின் திசைவழியை தீர்மானிப்பவர்கள் விடுதலைச் சிறுத்தைகள்.

இந்திய தேசிய அரசியலையும் கூர்மைப்படுத்துபவர்கள் விடுதலைச் சிறுத்தைகள். எங்களை நோக்கி அதிகாரம் வரும்; எங்களை நோக்கி நாற்காலிகள் வரும். எங்களை ஓரங்கட்ட பார்த்தாலும், ஒதுக்கப் பார்த்தாலும் நாங்களே மையம் என்பதை நிறுவுவோம் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: திருமாவளவன் மீது பூக்கள் தூவ ரூ.9 லட்சமா? ஹெலிகாப்டர் வைத்து மாஸ் காட்டும் விசிக!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share