×
 

பெரியாரை அவதூறு செய்ததற்கு கண்டனம் தெரிவிக்காதது ஏன்? விஜய்க்கு திருமாவளவன் கேள்வி!!

முருகன் மாநாட்டில் பெரியாரை அவதூறு செய்ததற்கு இதுவரை கண்டனம் தெரிவிக்காதது ஏன் என தவெக தலைவர் விஜய்க்கு விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜகவுடன் அதிமுக பயணிப்பது தற்கொலைக்கு சமம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு இடையில்தான் போட்டி. அதிமுகவுடன் பாஜக இருப்பதால், அக்கூட்டணியை வீழ்த்தவேண்டிய தேவை இருக்கிறது.

அக்கூட்டணியில் அதிமுக அமைதியாகவும், பாஜக சுறுசுறுப்பாகவும் இயங்கி வருகிறது. எந்த கூட்டணியாக இருந்தாலும் சரி பாஜக, பாமக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது. அதிமுகவை விழுங்குவதுதான் பாஜவின் திட்டம்.  இதை அதிமுக புரிந்து கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: விநாயகர் தமிழ் கடவுள் இல்லையா? அது முருக பக்தர்கள் மாநாடே இல்லை... கடுமையாக சாடிய திருமாவளவன்!!

அதிமுகவின் திராவிட இயக்கத்தில் வளர்ந்தவர்தான் நயினார் நாகேந்திரன். அவர் இப்போது தமிழக பாஜக தலைவராகிவிட்டார். அதிமுக ஆண்ட கட்சி. அது தேய்மானம் அடைவதற்கு அதிமுக உடன்படுகிறதா? பாஜகவுடன் அதிமுக பயணிப்பது தற்கொலைக்கு சமம்.

இந்து முன்னணி நடத்திய முருகன் மாநாட்டில் பெரியாரை அவதூறு செய்ததற்கு இதுவரை எந்த ஒரு கண்டனமும் தெரிவிக்காதது ஏன்? கமல்ஹாசன் ஆரம்பத்தில் பேசிய அரசியலுக்கும், இப்போதைய அரசியல் பேச்சிலும் மாற்றம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: “இந்து என்ற மதமே கிடையாது.. யார் அதை உருவாக்கியது”; இந்துக்கள் மனதில் தீயைப் பற்ற வைத்த திருமா...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share