அமித்ஷா மட்டும்தான் கூறுகிறார்; எடப்பாடி இதுவரை ஏதும் கூறவில்லை... திருமாவளவன் பகீர் கருத்து!!
அதிமுக பாஜக இடையே பிணைப்பு இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் அதற்கான பணிகளை மிக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஆளும் திமுகவை எதிர்க்க அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துள்ளது. அவர்களுடன் மேலும் சில கட்சிகள் கூட்டணியில் இணைவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் தேர்தலில் அதிக அளவிலான இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக அதிமுக ஆட்சியமைக்கும் என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித்ஷா கூறியிருந்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமியோ தனித்து ஆட்சி அமைப்போம் என்று தெரிவித்துள்ளது விவாதத்துக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், இதுக்குறித்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், அமித்ஷா மட்டும்தான் திரும்ப திரும்ப கூட்டணி ஆட்சி என்று கூறி வருகிறார்.
இதையும் படிங்க: "தலித்து விரோத நடவடிக்கை" - திமுகவுக்கு எதிராக தீயைப் பற்ற வைத்த திருமா...!
இதுவரை எடப்பாடி பழனிசாமி எந்தக் கருத்தையும் சொல்லாமல் மெளனம் காத்து வருகிறார் என்று கூறியிருந்தேன். தற்போது எடப்பாடி அதற்கு விடை கொடுத்துள்ளார். அதிக இடங்களில் வெற்றி பெற்று அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளது பாஜகவிற்கான பதில் தான் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி இல்லை. அதிமுக அதற்கு உடன்படாது என்ற கருத்தையே பாஜகவினருக்கு எடப்பாடி சொல்லியிருக்கிறார். அதிமுக பாஜக இடையே இணைப்பு இருக்கிறது. ஆனால், பிணைப்பு இல்லை என்றார். மேலும், கஸ்டடி டெத் என்பது நிகழக் கூடாது. அதை அடுத்தடுத்து சம்பவங்கள் நிகழ்கிறபோது, சுட்டியும் காட்டுகிறோம். ஆனால் இது தொடர்கதையாக நீடிப்பது கவலை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாஜகவோடு இணைப்பு தான் இருக்கு.. பிணைப்பே இல்லங்க! அதிமுக கூட்டணி குறித்து திருமா நச் பதில்..!