×
 

திருப்பதி பிரசாத லட்டின் நெய்யில் பாமாயில்! கடவுளுக்கு எதிரான பாவம்! ஆந்திர முதல்வர் கொதிப்பு!

திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், பாமாயில் உள்பட தாவர எண்ணெய் வகைககள், செயற்கையான நறுமணத்திற்காக வேதிப்பொருட்கள் கலப்படம் செய்யப்பட்டதை உறுதிப் படுத்தியது.

திருப்பதி லட்டு தயாரிப்பில் நெய் கலப்பட விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக குற்றம்சாட்டியது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதனை அடுத்து துணை முதல்வர் பவன் கல்யாண் உண்ணாவிரதம், பாதயாத்திரை மேற்கொண்டு ஏழுமலையானை தரிசித்தார். இருவரும் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியை கடுமையாக விமர்சித்தனர்.

தொடர்ந்து சிபிஐ சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) 15 மாதங்கள் விசாரணை நடத்தியது. சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில், திருப்பதி லட்டுக்கு பயன்படுத்தப்பட்ட நெய்யில் பாமாயில், பிற தாவர எண்ணெய்கள், செயற்கை நறுமணத்திற்கான வேதிப்பொருட்கள் கலந்திருப்பதை உறுதி செய்தது. ஆனால் விலங்கு கொழுப்பு (beef tallow அல்லது lard) கலக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று தெளிவாகக் கூறியது.

இதையும் படிங்க: திருப்பதி பிரசாத லட்டில் விலங்கு கொழுப்பு இல்லை!! சிபிஐ ஆய்வில் தகவல்! கடுகடுக்கும் சந்திரபாபு நாயுடு!

இருப்பினும், முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது குற்றச்சாட்டில் உறுதியாக இருக்கிறார். "2024-ல் ஆட்சியேற்ற பிறகு திருப்பதி கோயிலை சுத்தப்படுத்தும் பணியில் நெய் மாதிரிகளை தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்துக்கு (NDDB-CALF) அனுப்பினோம்.

அவர்கள் விலங்கு கொழுப்பு இருப்பதாக கூறினர். அதைத்தான் நான் வெளியிட்டேன். சிபிஐ அறிக்கையில் தாவர எண்ணெய் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டாலும், கலப்படம் நடந்தது உறுதி. சிலர் மீது சட்ட நடவடிக்கை பரிந்துரைக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

மேலும், "கடவுளுக்கான பிரசாதத்தில் கலப்படம் செய்தது மிகப் பெரிய பாவம். ஜெகன்மோகன் ரெட்டி மன்னிக்க முடியாத தவறு செய்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் என் குலதெய்வம். 2003 கன்னி வெடி தாக்குதலில் கடவுள் என்னை காப்பாற்றினார். இந்த விவகாரத்தில் தனி நபர் கமிஷன் அமைக்கப்படும். கூடுதல் தகவல்கள் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும். கலப்படம் செய்தோர் தப்ப மாட்டார்கள்" என்று வலியுறுத்தினார்.

துணை முதல்வர் பவன் கல்யாண், "சிபிஐ ஒய்எஸ்ஆர் காங்கிரஸுக்கு சுத்த சான்றிதழ் வழங்கவில்லை. கலப்படம் உறுதியானது. மத உணர்வுகள் அடங்கிய விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் பொறுப்பற்று பேசக் கூடாது" என்று கூறினார்.

இந்த விவகாரம் ஆந்திர அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யெஸ்ஆர் காங்கிரஸ் தரப்பு சிபிஐ அறிக்கையை மேற்கோள் காட்டி, விலங்கு கொழுப்பு இல்லை என்று மறுத்து வருகிறது. திருப்பதி லட்டு மக்களின் நம்பிக்கைக்கு உரியது என்பதால், இந்த விவாதம் தொடர்ந்து சூடுபிடித்துள்ளது.

இதையும் படிங்க: திருப்பதி பிரசாத லட்டில் விலங்கு கொழுப்பு இல்லை!! சிபிஐ ஆய்வில் தகவல்! கடுகடுக்கும் சந்திரபாபு நாயுடு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share