திமுக தயவில் அதிமுக ஆட்சியா..? வாய்ப்பில்ல ராஜா..! கைவிரித்த டிகேஎஸ் இளங்கோவன்..!
திமுக மற்றும் அதிமுக கூட்டணி தொடர்பான விமர்சனத்திற்கு டி கே எஸ் இளங்கோவன் விளக்கம் கொடுத்தார்.
தமிழக அரசியல் களம் தற்போது மிகுந்த பரபரப்பு மற்றும் பதற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தலைமையிலான கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், பெரும்பான்மைக்கு இன்னும் 10 இடங்கள் குறைவாக உள்ளது. இதனால் ஆட்சி அமைக்கும் பணியில் தொடர்ந்து இழுபறி நிலவுகிறது.
ஆளுநர் மாளிகைக்கு சென்ற தவெக தலைவர் ஜோசப் விஜய் ஆளுநர் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது தவெக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் விஜய் வழங்கினார்.
பெரும்பான்மை நிரூபித்தால் தான் ஆட்சி அமைக்க அழைக்க முடியும் என ஆளுநர் திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில், திமுகவின் தயவுடன் அதிமுக ஆட்சி அமைக்க இருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அதிமுக நிர்வாகிகள் பேசி வருகின்றனர். நிச்சயமாக எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைப்பார் என்று கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: விஜய் சர்க்கார் தானா..? பெரும் எதிர்பார்ப்பு..! திருமாவளவன் பேட்டி..!!
திமுக மற்றும் அதிமுக விஜய்க்காக சமரசம் செய்து கொண்டதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில், தமிழ்நாடு அரசியலில் திமுகவும் அதிமுகவும் ஆகப்பெறும் எதிரிகள் என்று திமுக நிர்வாகி டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்தார். அதிமுக ஆட்சி அமைப்பதற்கு திமுக உதவி செய்யப் போவதாக பரவி வரும் பரபரப்பு தகவல் குறித்து விளக்கம் கொடுத்தார் அப்படி நடக்க வாய்ப்பே கிடையாது என்று டி கே எஸ் இளங்கோவன் உறுதியாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திமுக தயவோடு அதிமுக ஆட்சி.? எடப்பாடிக்கு ஆதரவா..? கனிமொழி ஓபன் டாக்..!!