×
 

மும்பையில் த்ரிஷாவிடம் அமித்ஷா தரப்பு பேச்சுவார்த்தை?! அதிமுக -பாஜகவில் இணைகிறதா தவெக?

அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் த.வெ.க.,வை சேர்ப்பதற்கான கடைசி முயற்சியாக, நடிகை த்ரிஷா, மும்பையில் அமித் ஷாவிடம் பேச்சு நடத்திய தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அ.தி.மு.க.-பா.ஜ. கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகத்தை (த.வெ.க.) இணைப்பதற்கான கடைசி முயற்சியாக, நடிகை த்ரிஷா மும்பையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது த.வெ.க. தலைவர் விஜய் அரசியல் எதிர்காலத்தை பெரிதும் பாதிக்கும் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

த.வெ.க. தலைவர் விஜய் தனி கூட்டணி அமைத்து தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுக்கு கடும் போட்டி கொடுக்க திட்டமிட்டிருந்தார். ஆட்சியில் பங்கு தருவதாக அறிவித்தும், எந்த கட்சியும் ஆர்வம் காட்டவில்லை. கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் ஏற்பட்ட பிறகு, விஜயின் பிரசாரத்தில் தொய்வு ஏற்பட்டது. தி.மு.க.வை கடுமையாக விமர்சித்த விஜய், தனித்து தோல்வியடைந்தால் பழிவாங்கல் நடவடிக்கைகள் தொடங்கும் என்ற அச்சத்தில் உள்ளார்.

இந்நிலையில், பா.ஜ. தரப்பில் விஜயை கூட்டணிக்கு இழுக்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. விஜயின் நெருங்கிய நட்பு வட்டத்தில் உள்ள நடிகை த்ரிஷா, கரூர் சம்பவம் தொடர்பான சி.பி.ஐ. விசாரணைக்காக விஜய் டில்லி சென்றிருந்தபோது, ஒருநாள் முன்பாக மும்பை சென்று அமித் ஷாவை சந்தித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதையும் படிங்க: தொகுதி பங்கீட்டை இழுத்தடிக்கும் எடப்பாடி! அமித்சா டென்ஷன்! பேச்சுவார்த்தைக்கு தேதி குறிச்சாச்சு!

இதன்பிறகு, சி.பி.ஐ. விசாரணை நெருக்கடி இல்லாமல் முடிந்து விஜய் சென்னை திரும்பினார். மேலும், விஜயின் 'ஜனநாயகன்' படத்தை தணிக்கை குழு மீண்டும் மறு தணிக்கைக்கு அனுமதித்துள்ளது. இதற்கும் த்ரிஷாவின் முயற்சிகள் உதவியதாக கூறப்படுகிறது.

அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன் வழியாகவும், த்ரிஷாவிடம் கூட்டணி பேச்சு நடத்தப்பட்டுள்ளது. த.வெ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இந்த முடிவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதற்கிடையே, கரூர் சம்பவம் தொடர்பான சி.பி.ஐ. விசாரணைக்கு டில்லி சென்ற விஜய், பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக சென்னை அல்லது தமிழகத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று சி.பி.ஐ.க்கும், ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகிக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

த.வெ.க. நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறுகையில், "விஜயை மக்கள் முதல்வராக ஏற்றுக்கொண்டுள்ளனர். முடிவு தலைவர் எடுப்பார்" என்றார். தேர்தல் களத்தில் த.வெ.க.வின் அடுத்த நகர்வு என்ன என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: ரூ.5 கோடி இல்லையே! கைவிரித்த நிர்வாகிகள்! கூட்டணியை நோக்கி விஜய் நகர இதுதானா காரணம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share