×
 

தமிழ்நாடு நம்மை நம்பித்தான் உள்ளது!! நாமும் தமிழ்நாட்டை நம்பித்தான் உள்ளோம்!! முதல்வர் ஸ்டாலின் சூளுரை!

திருச்சி என்றாலே திருப்பம்தான். திமுக தொடர்ந்து ஆட்சி செய்ய வேண்டும் என்ற உறுதியை இந்த மாநாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

திருச்சி, மார்ச் 9: திமுகவின் 12-வது மாநில மாநாடு திருச்சியில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று மேடையேறி உரையாற்றினார். “திரும்பும் திசையெல்லாம் அண்ணாவின் தம்பிகள்! திமுகவின் பெரும் சேனை திரண்டுள்ளது. 

சேனையின் தலைமை தொண்டன் நான்” என்று உணர்ச்சிப் பொங்கத் தொடங்கிய அவர், “10 லட்சம் பேர் திரண்டுள்ள இந்த மாநாடு பிரமாண்டமானது. தமிழகமே திருச்சியில் திரண்டுள்ளது. உங்கள் உற்சாகம் என் வயதை குறைத்துவிட்டது. என் இளமைக்கு காரணம் தொண்டர்களின் அன்புதான்” என்று கூறினார்.

“நேற்று இன்று தொடங்கிய அன்பல்ல இது. 72 ஆண்டு கால அன்பு. திமுக மாநாட்டால் சிறுகனூர் பெருகனூராக மாறியுள்ளது. 3 மாதங்களாக மாநாடுகள் நடத்தி தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளோம். கிரிக்கெட்டில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து வெற்றி பெறுவது போல, தேர்தலிலும் வெற்றி பெறப் போகிறோம். 

இதையும் படிங்க: OVER... OVER..! உங்க ஆட்சியின் ஆயுசு ஓவர்தான் ஸ்டாலின் சார்..!! சாடிய அதிமுக..!!

திருச்சி என்றாலே திருப்பம் தான். திமுக தொடர்ந்து ஆட்சி செய்ய வேண்டும் என்ற உறுதியை இங்கே எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாடு நம்மை நம்பியுள்ளது; நாமும் தமிழ்நாட்டை நம்பியுள்ளோம்” என்று ஸ்டாலின் வலியுறுத்தினார்.

திமுக ஆட்சி தொடர்ந்தால் மட்டுமே தமிழ் சமூகம் எதிர்பார்க்கும் முன்னேற்றம் கிடைக்கும் என்று கூறிய அவர், “திருச்சியில் அறிவித்த 7 இலக்குகளையும் ஐந்தாண்டு கால ஆட்சியில் நிறைவேற்றி விட்டோம். 5 ஆண்டுகளில் இவ்வளவு சாதனைகளை ஒரு மாநில அரசு செய்ய முடியுமா என்று வியக்கும் அளவுக்கு ஆட்சி நடத்தியுள்ளோம்” என்றார்.

தொழில் முதலீடு குறித்து பேசிய ஸ்டாலின், “அதிமுக ஆட்சியில் 471 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மட்டுமே. திமுக ஆட்சியில் 1,190 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. அதிமுகவை விட 3 மடங்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன” என்று பெருமிதம் தெரிவித்தார்.

மாநாட்டு மைதானம் முழுவதும் தொண்டர்களின் ஆரவாரம், கொடிகள், பதாகைகள், முழக்கங்கள் என பிரமாண்ட காட்சியாக இருந்தது. திமுக தொண்டர்கள் “தமிழ்நாடு திரும்பும் திசையெல்லாம் ஸ்டாலின் தலைமை” என்று உரத்த முழக்கமிட்டனர். இந்த மாநாடு வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு திமுகவின் பலத்தை வெளிப்படுத்தியுள்ளது. திருச்சி மாநாடு திமுகவின் வெற்றிப் பாதையில் முக்கிய திருப்புமுனையாக அமையும் என்று கட்சியினர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: 3 முறை அதிமுக முதலமைச்சர்! அம்மா விசுவாசி To அறிவாலயம்!! ஓபிஎஸ் கடந்து வந்த பாதை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share