பாதுகாப்பு படையையே தொடங்கி வைக்க முடியல..! எப்படி பாதுகாப்பீங்க..? விளாசிய TTV..!!
சென்னை கோயம்பேட்டில் இளம்பெண் மீது கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டி காட்டி டிடிவி தினகரன் குற்றம் சாட்டினார்.
சென்னையில் மதுபானக் கூடத்தில் நடனமாடியதில் ஏற்பட்ட மோதலில் 18 வயது இளம்பெண் ஒருவர் கோயம்பேடு மேம்பாலம் அருகே கார் ஏற்றி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ttv தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள, இளைஞர்களிடையே ஊடுருவியிருக்கும் போதைப் பொருட்களின் புழக்கத்தை ஒழிப்பதற்கு, அவர்களின் கவனத்தை விளையாட்டின் பக்கம் திருப்பினால் மட்டுமே உரிய தீர்வை அடைய முடியும் என்ற அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்களின் கருத்து முழுமை பெற வேண்டுமென்றால், தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் பரவிக் கிடக்கும் கஞ்சா உள்ளிட்ட அனைத்து விதமான போதைப் பொருட்களின் விற்பனையை முற்றிலும் தடை செய்தால் மட்டுமே அது சாத்தியமாகும் என உறுதிப்படுத்த தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சராக திரு. ஜோசப் விஜய் அவர்கள் பொறுப்பேற்ற நாளில் கையெழுத்திடப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையையே இதுவரை தொடங்கி வைக்க முடியாத தவெக அரசால் பெண்களுக்கு எதிரான குற்றங்களை எப்படி கட்டுப்படுத்த முடியும் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழத் தொடங்கியுள்ளது என்றும் விமர்சித்தார்.
இதையும் படிங்க: “ரீல்ஸ் போட நேரம் இருக்கு... பக்தர்களை கவனிக்க நேரமில்லையா?” - தினகரன் தாக்கு..!
எனவே, இளம்பெண் கொலை வழக்கை அடிப்படையாகக் கொண்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உரிய அனுமதி இல்லாமல் இயங்கும் மதுபானக்கூடங்களை மூடுவதோடு, அங்கு சட்டவிரோதமாக போதைப் பொருட்களை விற்பனை செய்யும் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துவதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: “சிங்கப்பெண் launch ஆகல... crime மட்டும் nonstop!”... TTV தினகரன் விளாசல்..!!