×
 

“அண்ணன் இபிஎஸ் தலைமையில்....” - அந்தர் பல்டி அடித்த டிடிவி தினகரன்... ஆடிப்போன ஆண்டிப்பட்டி...!

அண்ணன் இபிஎஸ் தலைமையில் மீண்டும் ஆட்சியமையப் போகிறது என்பதால், தோல்வி பயத்தில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து டெல்லியை மிரட்டி பார்க்கிறார் ஸ்டாலின்.

தேனி மாவட்டத்தில் போட்டியிடும் அமமுக மற்றும் அதிமுக வேட்பாளராகளை ஆதரித்து இன்று அக்கட்சிகளின் பொதுச்செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றாக இணைந்து பரப்புரை மேற்கொண்டனர். ஆண்டிபட்டி பழைய முருகன் தியேட்டர் அருகே நடந்த பரப்புரையில் பேசிய டிடிவி தினகரன், தற்போது இங்கு கூடியிருக்கும் கூட்டத்தை பார்க்கும் போது கடந்த 2002 ஆம் ஆண்டு இடைத்தேர்தலுக்காக ஆண்டிபட்டிக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வந்த போது கூடிய கூட்டம் போல் காட்சியளிக்கிறது. நிச்சயம் நடைபெற உள்ள தேர்தலில் தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறும், போடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக நாராயணசாமி வெற்றி பெறுவது உறுதி என்றார்.

தொடர்ந்து பேசிய டிடிவி, தொகுதிக்கு வராமல் எம்ஜிஆரை வெற்றி பெற வைத்து முதலமைச்சராக ஆக்கியது ஆண்டிபட்டி. இடைத்தேர்தலில் ஜெயலலிதாவை வெற்றி பெற வைத்து மீண்டும் அவரை முதலமைச்சராக ஆக்கியது ஆண்டிபட்டி தொகுதி எனக் கூறினார்.‌ மேலும் உடல்நலக்குறைவால் அமெரிக்காவில் எம்ஜிஆர் சிகிச்சையில் இருந்த போது அவர் இறந்து விட்டதாக பொதுமக்களிடம்  கூறியவர் கருணாநிதி. ஆனால் அதனை முறியடித்து மக்களிடம் பரப்புரை செய்து எம்ஜிஆர்-ன் வெற்றிக்கு ஜெயலலிதா உழைத்ததாக பேசினார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமயியர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத நிலையில், அந்த சட்டத்திற்கு ஸ்டாலின் போராட்டம் நடத்தினார். அதே போல் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள தொகுதி மறு வரையறையால் தென் மாநிலங்கள், குறிப்பாக தமிழகம் பாதிக்கப்படுவதாக ஸ்டாலின் கூறி வருகிறார்.‌ ஆனால் தொகுதி மறு வரையறையால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என பிரதமர், உள்துறை அமைச்சர் தெரிவித்தும், தேர்தல் நேரத்தில் தோல்வி பயத்தில் ஸ்டாலின் ஏதேதோ பேசி வருகிறார்.  தற்போது எங்களைப் பற்றி குறை ஏதும் சொல்ல முடியாததால், வரும் மே-4 அண்ணன் இபிஎஸ் தலைமையில் ஆட்சி அமையும் என்ற சூழல் நிலவுவதால் ஸ்டாலின் டெல்லியை மிரட்டி பார்க்கிறார்.

இதையும் படிங்க: தமிழ் புத்தாண்டு: முதல் ஆளாக தமிழில் வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி... இபிஎஸும் வாழ்த்து சொல்லிட்டாரு...!

 இதற்கு முன் டெல்லியை திமுக மிரட்டியதால் இந்திராகாந்தியால் ஆட்சி கலைக்கப்பட்டு மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். பின்னர் நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!  என் இந்திரா காந்தியுடன் கை கோர்த்தனர். எனவே தீயசக்தி திமுக வீழ வேண்டும், அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம் என்று பேசினார்.

இதையும் படிங்க: இபிஎஸ் எந்தத் திட்டத்தை சுயமா செயல்படுத்தினார்..? பரப்புரையில் கனிமொழி விளாசல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share