×
 

திமுகவும் - பாஜகவும் மிரட்டுறாங்க!! தேர்தல் கமிஷன் பார்த்துக்கோங்க!! - தவெக பாயிண்ட்!

''பிழையற்ற வாக்காளர் பட்டியல் வெளியாவதை, தேர்தல் கமிஷன் உறுதி செய்ய வேண்டும்,'' என, த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த் பேசினார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்.ஐ.ஆர்.) எதிராக தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) நேற்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. 38 மாவட்டங்களில் நடைபெற்ற போராட்டங்களில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர். சென்னை ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க. பொதுச்செயலர் ஆனந்த், தேர்தல் பிரசாரப் பிரிவு பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆனந்த் பேசுகையில், “வாக்காளர் பட்டியலில் இருந்து கொத்து கொத்தாக பெயர்கள் நீக்கப்படுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இறந்துவிட்டதாகவோ, வீடு மாறிவிட்டதாகவோ கூறி பெயர்களை நீக்குவது அப்பட்டமான துஷ்பிரயோகம். அதேநேரம் போலி வாக்காளர் பெயர்கள் சேர்க்கப்படுவதாகவும் தகவல் வருகிறது. யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்; ஆளும் கட்சியினர் அல்ல. 

எனவே எஸ்.ஐ.ஆர். பணியை மறு ஆய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் அதிகாரிகள் சென்று மேற்பார்வை செய்ய வேண்டும். ஓட்டுச்சாவடி அலுவலர்களை தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வினர் மிரட்டுவதை நிறுத்த வேண்டும். பிழையற்ற வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் உறுதி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: மூச்ச்ச்!!! வாயை திறக்கவே கூடாது!! கூட்டணி கட்சிகளுக்கு ஸ்டாலின் மறைமுக வார்னிங்!

ஆதவ் அர்ஜுனா பேசுகையில், “சட்டசபைக் கூட்டம் நடக்கும்போது எஸ்.ஐ.ஆர். எதிர்ப்பு தீர்மானத்தை தி.மு.க. அரசு கொண்டுவரவில்லை. அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு சார்பில் நடத்தாமல், தி.மு.க. நடத்தியது. உண்மையான, வெளிப்படையான தேர்தல் நடந்தால் த.வெ.க.தான் வெற்றி பெறும்” என்று தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களுக்கு மேடை அனுமதி, பாதுகாப்பு ஏற்பாடு உள்ளிட்டவற்றில் போலீசார் கடைசி நிமிடம் வரை த.வெ.க. நிர்வாகிகளை அலைக்கழித்ததாக புகார்கள் எழுந்தன. சென்னையில் போராட்டக்காரர்களை 10 கி.மீ. தொலைவு வரை சுற்ற விட்டதாகவும் தெரிகிறது.

த.வெ.க. இணைச் செயலர் நிர்மல் குமார் கூறுகையில், “ஈ.டி., ஐ.டி. ரெய்டுகளில் அமைச்சர்கள் சிக்குவார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் மன்னராட்சி போல பேசுகிறார். வழக்கமான பணிகளுக்கு இடையே ஆசிரியர்களை எஸ்.ஐ.ஆர். பணிக்கு பயன்படுத்துவது கொத்தடிமைத் தனம். இதனால் ஒரு கோடிக்கு மேற்பட்டோர் ஓட்டுரிமை இழப்பர்; குறிப்பாக இளைஞர்களின் ஓட்டுகளை குறி வைக்கிறது தி.மு.க. அரசு. 

தன் பெயரைச் சொல்லக் கூடாது என தடை உத்தரவு பெற்ற 10 ரூபாய் பாட்டில் நிறுவன உரிமையாளர், ஒவ்வொரு தி.மு.க. அமைச்சர், எம்.எல்.ஏ.வும் ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து குவித்துள்ளனர். மண், கல் குவாரி என இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றன. விரைவில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ரெய்டுகளில் தி.மு.க. அமைச்சர்கள் சிக்குவார்கள்” என்று குற்றம் சாட்டினார்.

தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஏற்கனவே எஸ்.ஐ.ஆர். பணி போலி வாக்காளர்களை நீக்கவும், பட்டியலை துல்லியமாக்கவும் அவசியம் என்று விளக்கம் அளித்துள்ளனர். ஆனால் த.வெ.க. இப்பணி மக்களின் ஓட்டுரிமையைப் பறிக்கும் முயற்சி என்று தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

இதையும் படிங்க: நண்பா, நண்பி!! உங்க பலத்தை காட்டுங்க!! தவெக கட்சியினருக்கு விஜய் போட்ட உத்தரவு!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share