×
 

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்தாரா விஜய்?... தவெக ஐ.டி.விங்க் கொடுத்த ஆணித்தரமான விளக்கம்...!

இப்படி கண்டனங்கள் குவிந்த நிலையில் தவெக ஐ.டி. விங்க் விஜய் பேச்சுக்கு விளக்கமலித்துள்ளது.

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் ஒரே வாரத்தில் முதலமைச்சர் விஜய் பல்டி அடித்துள்ளதாக திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. தொகுதி மறுவரையறையை ஆதரிப்பவர்கள் தமிழ்நாட்டின் எட்டப்பர்கள் என ராகுல் காந்தி கூறியது இவரைத்தானா எனவும் முதலமைச்சர் விஜயை குறிப்பிட்டு திமுக சாடியுள்ளது. மேலும், கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தாவேக்காவின் இரட்டைவேட நாடகத்தை கேள்வி கேட்பார்களா அல்லது இதற்கும் முட்டுக்கொடுத்துக்கொண்டிருப்பார்களா என திமுக காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது.

திரைப்படங்களில் பல்டி அடித்து நடனமாடுவதில் பெயர் பெற்ற முதலமைச்சர் விஜய், அதையெல்லாம் மிஞ்சும் அந்தர்பல்டியை தற்போது தொகுதி மறுவரையறை விவகாரத்தில் எடுத்துள்ளதாக அதிமுக விமர்சித்துள்ளது. இப்படி பல்டி அடிப்பதற்கு எதற்கு ஒரு தீர்மான நாடகம் என்றும் அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.

வாரத்திற்கு வாரம் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் தவெக அரசின் உண்மையான நிலைப்பாடு என்னவென்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், முதல்வர்கள் மாநாட்டில் முதலமைச்சர் விஜய் பேசியதன் மூலம் தாவேக்கா அரசின் நாடகம் அம்பலமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இடதுசாரிகளை ஒடுக்க நினைக்கிறதா தமிழக அரசு? சிபிஐ(எம்) மூத்த தலைவர் பி.சண்முகம் கண்டனம்!

அதேபோல், முதலமைச்சர் விஜய் தனது நிலைப்பாட்டை ஒருபோதும் மாற்றிக்கொள்ளக் கூடாது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

“இங்க ஒரு நிலைப்பாடு, அங்க ஒரு நிலைப்பாடு என்றால், இதையெல்லாம் மக்கள் பார்ப்பார்கள். நீங்கள் பிரஸ் பீப்பிளே இதைக் கேள்வியாகக் கேட்கிறீர்கள். நிச்சயமாக நம்முடைய நிலைப்பாட்டில் என்னைக்குமே நாம் மாறக்கூடாது. ஒரு நிலைப்பாட்டை எடுத்தால், அதில் உறுதியாக இருந்தால்தான் மக்கள் நம் மீது நம்பிக்கை வைப்பார்கள். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதுதான் கேப்டனின் நிலைப்பாடு, அதுதான் எனது நிலைப்பாடு, தேமுதிகாவின் நிலைப்பாடு. அதனால், நம்முடைய முதலமைச்சர் தமிழ்நாட்டின் உரிமைகளை எந்தக் காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்கக் கூடாது. தனது நிலைப்பாட்டை கட்டாயம் மாற்றிக்கொள்ளக் கூடாது.”

இப்படி கண்டனங்கள் குவிந்த நிலையில் தவெக ஐ.டி. விங்க் விஜய் பேச்சுக்கு விளக்கமலித்துள்ளது. அதில், மாமல்லபுரத்தில் இன்று நடந்த 31வது தென் மண்டல குழு கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் ஆற்றப்பட்ட உரையில் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் வெற்றி பெற்ற தென் மாநிலங்களின் தற்போதைய பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கும் பரந்த தொலைநோக்கு கருத்தை தெரிவித்தார்கள். தமிழ் நாடு சட்டமன்றத்தில் 12.8.2026 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இதனைச் செயல் வடிவில் கூறுகிறது. அதாவது, மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543 ஆக நிர்ணயித்தல், மாநிலங்களுக்கு இடையேயான தற்போதைய இட ஒதுக்கீடு விகிதாச்சாரதை மாற்றாமல் தொடரச் செய்தல், மற்றும் வருங்காலத் தேர்தல்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்தல் ஆகிய பொருளில் தீர்மானங்களை நிறைவேற்றி 12.8.2026 அன்றே மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கும் நேர்முகக் கடிதம் எழுதிய நிலையில், இது குறித்து குறைந்த பட்ச புரிதல் இல்லாமல் தொகுதி மறுவரையறை குறித்து தவறானக் கருத்து பரப்பப்படுகிறது” எனக்கூறப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: விஜய் வருங்கால பிரதமரா? கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் அளித்த சுவாரஸ்ய பதில்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share