“எரியுதடி மாலா” என புலம்ப வேண்டாம்!! பலவீனமான தலைமை என அதிமுகவை விமர்சிக்கும் தவெக!!
ஒரு பலவீனமான தலைமை, தன் தோல்வியை மறைப்பதற்காக அரசு மீதும் நமது கழகத்தின் மீதும் பழி போடுகிறது அதிமுக என தவெக விமர்சித்துள்ளது.
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.,) தகவல் தொழில்நுட்ப அணி எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்யும் முறையை கூட சரியாக அறியாத நிலையில் இருப்பதாகச் சாடியுள்ள இந்தப் பதிவு, கடும் விமர்சனத்துடன் வெளியாகியுள்ளது.
“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் சட்டமன்றச் செயலகத்தில் தான் கொடுக்க வேண்டும் என்பது கூட தெரியாத ஒருவர், பல முறை ஆட்சி செய்த கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கிறார் என்று எண்ணி தமிழக மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள்” என்று த.வெ.க. தகவல் தொழில்நுட்ப அணி குறிப்பிட்டுள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தஙகளின் ராஜினாமா கடிதத்தை "தலைமைச் செயலகத்தில்" சபாநாயகரிடம்தான் கொடுக்க முடியும் என்பதைக்கூட அறியாத ஒருவர், ஏற்கனவே பல முறை ஆட்சி செய்த கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கிறார் என்பதை எண்ணி தமிழக மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள்.…
— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) May 26, 2026
மேலும், “தொடர் தோல்விகளால் ‘எரியுதடி மாலா’ என புலம்ப வேண்டாம். உங்கள் அரசியல் சாம்ராஜ்யம் சரிந்து வருவதை எங்கள் மீது பழி போட்டு காப்பாற்ற முடியாது” என்றும் தாக்குதல் நடத்தியுள்ளது. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு, மக்கள் மன்றத்தை மீண்டும் சந்திக்க துணிவுடன் வருவதாகவும், இது தார்மீகப் பொறுப்பை உணர்ந்து எடுக்கப்பட்ட முடிவு என்றும் த.வெ.க. பதிவில் விளக்கியுள்ளது.
இதையும் படிங்க: கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு இனி தேவையில்லை!! தனிப்பெரும்பான்மை நோக்கி நகர்கிறது விஜயின் தவெக!
கடந்த காலத்தில் கூவத்தூரில் நடைபெற்ற “சொகுசு விடுதி அரசியல்” போன்ற நாடகங்களை மக்கள் மறக்கவில்லை என்றும், ஆனால் தற்போது எம்.எல்.ஏ.க்கள் சுய விருப்பத்துடன் த.வெ.க.,வில் இணைவதாகவும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “தேர்தலில் மக்கள் உங்களை நிராகரித்துவிட்டார்கள். இப்போது உங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களே உங்களை நிராகரித்து வருகிறார்கள்” என்று சாடியுள்ள த.வெ.க. அணி, தங்கள் கவனம் முழுவதும் மக்கள் மேம்பாடு மற்றும் தமிழக வளர்ச்சியிலேயே உள்ளது என்றும் வலியுறுத்தியுள்ளது.
இந்தப் பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. எதிர்க்கட்சியினர் இதை “அப்பட்டமான பொய் பிரச்சாரம்” என்று விமர்சித்து வரும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்த தீவிர ஆலோசனை! அடுத்த சிக்சருக்கு ரெடியாகும் முதல்வர் விஜய்!!