×
 

சொதப்பல்!! தப்பான பேருக்கு லெட்டர் போட்ட தவெக! விஜய்க்கு பாதுகாப்பு கோரி பதவியில் இல்லாதவருக்கு கடிதம்!!

அஜய் பல்லா ஒன்றரை ஆண்டுக்கு முன் கவர்னராக நியமிக்கப்பட்டு விட்டார் என தெரியாமல், தவெக தலைவர் விஜய்க்கு உரிய பாதுகாப்பு கோரி நிர்மல் குமார், தன் புகார் கடிதத்தை உள்துறை செயலாளர் அஜய் பல்லாவுக்கும் அனுப்பியது சர்ச்சையானது.

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் நடிகர் விஜய்க்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதிய கடிதத்தில், உள்துறை செயலாளர் என்று தவறாகக் குறிப்பிட்டு அஜய் பல்லாவுக்கு அனுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வில்லிவாக்கத்தில் நடைபெற்ற த.வெ.க. பொதுக்கூட்டத்தின்போது, பெண்கள் அமர்ந்திருந்த பகுதியில் உடைந்த கண்ணாடித் துண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அயனாவரம் கலைவாணி (45) என்பவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டது. 

கூட்டத்தில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, த.வெ.க. நிகழ்ச்சிகளுக்கு தமிழக போலீசார் போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று கட்சியின் இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதினார்.

இதையும் படிங்க: 50 லட்சம் இளைஞர்களுக்கு ஜாக்பாட்... ஸ்டன் ஆன தேர்தல் களம்... ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட உதயநிதி...!

அந்தக் கடிதத்தில், “த.வெ.க. கட்சி அனுமதி பெற்று பிரசாரம் செய்தாலும் போலீசார் பாதுகாப்பு அளிப்பதில்லை. ஒய் பிரிவு பாதுகாப்பில் உள்ள தலைவர் விஜய்க்கு தேர்தல் பிரசாரத்தின்போது பாதுகாப்பு குறைபாடு உள்ளது. இது கவலை அளிக்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் இந்தக் கடிதத்தை நிர்மல் குமார், உள்துறை செயலாளர் அஜய் பல்லாவுக்கும் அனுப்பியுள்ளார். இது பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. ஏனெனில் அஜய் பல்லா, ஒன்றரை ஆண்டுக்கு முன்பே தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டு விட்டார். தற்போது உள்துறை செயலாளராக வேறு ஒருவர் பொறுப்பில் உள்ளார். யார் உள்துறை செயலாளர் என்று கூட தெரியாமல் நிர்மல் குமார் கடிதம் எழுதியது இணையத்தில் பெரும் கேலிக்கு உள்ளாகியுள்ளது.

வில்லிவாக்கம் கூட்டத்தில் கண்ணாடித் துண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தில் அப்பு மற்றும் ரித்விக் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு தான் பாதுகாப்பு குறித்து நிர்மல் குமார் கடிதம் எழுதியுள்ளார்.

த.வெ.க.வினர், தமிழக போலீசார் தங்கள் கட்சி நிகழ்ச்சிகளுக்கு போதிய பாதுகாப்பு அளிப்பதில்லை என்று தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால், உள்துறை செயலாளர் என்று தவறான பெயரில் கடிதம் அனுப்பியது, கட்சியின் நிர்வாகத் திறன் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்த சர்ச்சை த.வெ.க.வுக்குள் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பிரசாரம் தீவிரமடையும் நிலையில், பாதுகாப்பு பிரச்னை மற்றும் நிர்வாகத் தவறு குறித்த விவாதங்கள் அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ளன.

இதையும் படிங்க: இனி அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கும் கட்டணம்..!! புதிய மசோதாவுக்கு ஈரான் கிரீன் சிக்னல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share