தொகுதிக்கு விசிட் அடித்த முதல் நாளே இப்படியா?... தவெக அமைச்சர் செயலால் ஷாக்கில் மக்கள்... அம்பலமான ‘ஸ்டிக்கர்’ அரசியல்...!
தொகுதிக்கு விசிட் அடித்த முதல் நாளிலேயே ஸ்டிக்கர் ஒட்டிய தவெக அமைச்சரால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
தேர்தலுக்கு முன் டென்டர் விடப்பட்ட சாலை பணி தன்னால் தான் வந்தது என ஸ்டிக்கர்வாக்கு சேகரிப்பின் போது கிராம மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றியதாக அதிகாரிகளுடன் சென்று தொகுதிக்கு வந்த முதல் நாளிலேயே கிராம மக்களை சந்தித்தார் அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளராக டாக்டர் டி.கே. பிரபு போட்டியிட்டு வெற்றி பெற்று காரைக்குடி சட்டமன்ற தொகுதியின் முதன் முதலான அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார் எந்த துறை என்று இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், காரைக்குடி வந்த அமைச்சருக்கு அதிகாரிகள் மற்றும் தவெகவினர் வரவேற்ப்பு அளித்தனர்.
தனியார் மஹாலில் நிர்வாகிகளிடையே பேசிய அமைச்சர் பிரபு லஞ்சம் வாங்க மாட்டேன், கமிசன் வாங்க மாட்டேன். தமிழகத்துக்கு பவர் சென்டர் தலைவர் விஜய் போலவே காரைக்குடி தொகுதிக்கு நானே பவர் சென்டர். என்னுடைய பெயரை பயன்படுத்தி எந்த செயலிலும் ஈடுபட நான் அனுமதிக்க மாட்டேன். மக்கள் என்னை நேரடியாக தொடர்பு கொள்ள ஒரிரு நாளில் ஏற்பாடு ஒன்றை செய்ய உள்ளேன் என்றார்.
இதையும் படிங்க: தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்! 60 ஆண்டுகளுக்கு பின் நிகழும் மாபெரும் மாற்றம்!
அதன் பின் அதிகாரிகளுடன் ஆய்வு என்று கிளம்பியவர். தேவகோட்டை தாலுகா வீரை ஊராட்சி நெடுங்குளம் கிராமத்தில் வாக்கு சேகரிக்க சென்றபோது அப்பகுதி மக்கள் தங்கள் கிராமத்திற்கு பல ஆண்டுகாலமாக சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறோம் வாக்கு மட்டும் கேட்டு வருகிறார்கள். வெற்றி பெற்ற பிறகு எங்கள் பகுதிக்கு வருவதில்லை கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றுவதில்லை என்று கூறினர்.
அப்போது டாக்டர் பிரபு வெற்றி பெற்றவுடன் தொகுதியில் முதல் வேலையாக சாலை அமைத்து கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி தருவேன் என்று வாக்குறுதி கொடுத்து வாக்கு சேகரித்திருந்திருந்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராகவும் பதவி ஏற்றிக் கொண்ட பின் முதல்முறையாக காரைக்குடிக்கு வருகை தந்த அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு, தான் வாக்கு சேகரிப்பின் போது வாக்குறுதி கொடுத்த கிராமமான நெடுங்குடி கிராமத்திற்கு சென்று தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஸ் வெங்கட் வட்ஸ் வட்டாட்சியர் தங்கமணி , ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர், மக்கள் தொடர்பு அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளை வரவழைத்து சாலை அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து விவரங்கள் கேட்டு அறிந்தார் .
நெடுங்குளம் கிராம மக்களின் கோரிக்கையாக சாலை மேம்பாட்டு பணிக்கு ரூபாய் 1.22 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்று கூறினார் இதைத் தொடர்ந்து
வாக்கு சேகரிப்பின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியதால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் புதிய அரசு பொறுப்பேற்று எந்த திட்டப் பணிகளும் துவங்க படாத நிலையில் முந்தைய சட்டமன்ற உறுப்பினரின் முயற்சியில் டென்டர் விடப்பட்ட பணிகளை உடனடியாக தான் கொண்டு வந்ததாக ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
இதையும் படிங்க: பதவி ஆசைக்காக செய்த துரோகம்! அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி கடும் எச்சரிக்கை!