×
 

விசில் போடு..! நெருங்கும் தேர்தல்... திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்யும் விஜய்..!!

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக விஜய் இன்று வேட்பு மனுதாக்கல் செய்கிறார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கும் நிலையில், இன்று முதல் அரசியல் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்யத் தொடங்குகின்றனர். இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15 அன்று அறிவித்த தேர்தல் அட்டவணையின்படி, தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் சுமார் 5.67 கோடி வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் பங்கேற்க உள்ளனர். இதில் ஆண்கள் சுமார் 2.77 கோடியும், பெண்கள் சுமார் 2.89 கோடியும் அடங்குவர்.

முதல் முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 12.51 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 7 ஆம் தேதி நடைபெறும். 

இந்த நிலையில், வேட்பு மனு தாக்கல் செயல்முறை மார்ச் 30 ஆம் தேதி முதல் தொடங்கிய சூழலில், அரசியல் கட்சியினர் வேட்பு மனுத் தாக்கல் செய்ய மும்முரம் காட்டி வருகின்றனர். வேட்பு மனுத் தாக்கல் செய்ய அவகாசம் இருப்பினும் இந்த எட்டு நாட்கள் காலத்தில் பல பொது விடுமுறை நாட்கள் இடம்பெற்றுள்ளன.

இதையும் படிங்க: ஆதவ் அர்ஜுனா கூட்டத்தில் நடந்த பகீர் சம்பவம்... வெளியானது சிக்கிய 2 பேரின் அதிர்ச்சி பின்னணி...!

வேட்பு மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளே தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார். பெரம்பூர் மற்றும் ஈரோடு திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிடுகிறார். இந்த நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுதாக்கல் செய்ய உள்ளார் விஜய். வேட்பு மனுதாக்கல் செய்வதற்காக விஜய் சென்னையில் இருந்து தனி விமான மூலம் திருச்சிக்கு சென்றடைந்தார். தேர்தல் பரப்புரை வாகனத்தில் சென்று திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட விஜய் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

இதையும் படிங்க: சூடு பிடிக்கும் தேர்தல் களம்... புதுவையில் பிரச்சாரம் செய்ய விஜய்க்கு அனுமதி..!! தொண்டர்கள் குஷி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share