தமிழ்நாட்டு மக்கள் நலனில் கவனம் செலுத்துவோம்..! பிரதமர், ராகுலுக்கு நன்றி தெரிவித்த விஜய்..!
சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்திக்கு விஜய் நன்றி தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்துள்ளது. இதுவரை இரு திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்திற்கு இடையில் நடைபெற்ற தேர்தல்கள், இம்முறை புதிய அரசியல் சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையால் பெரும் மாற்றத்தைச் சந்தித்துள்ளன. தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கியுள்ளது தமிழக வெற்றிக் கழகம்.
விஜய் தலைமையில் 2024 பிப்ரவரி 2 அன்று தொடங்கப்பட்ட இந்தக் கட்சி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து அனைத்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னணி திராவிடக் கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகியவற்றுக்கு இடையே மூன்றாவது துருவமாக உருவெடுத்த த.வெ.க., விஜய்யின் மக்கள் செல்வாக்கை அடிப்படையாகக் கொண்டு வேகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.
கட்சி தொடங்கிய காலம் முதலே விஜய் தமிழ்நாட்டின் அரசியல் மாற்றத்திற்கான தேவையை வலியுறுத்தி வந்தார். சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியை தமிழக வெற்றிக்கழகம் பெற்றுள்ளது. முதல் தேர்தலிலேயே மாபெரும் வெற்றியை தனதாக்கிய விஜய்க்கு பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட ஏராளமான அரசியல் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.
இதையும் படிங்க: என்னை வெச்சுதான் ஸ்டாலின் ஜெயிச்சாரு..! இப்போ ஸ்டாலினை வைத்தே நான் ஜெயிச்சுட்டேன்..! வி.எஸ். பாபு பேட்டி..!
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கூறியுள்ளார். மேலும், தன்னை தொலைபேசியில் அழைத்து அன்பான வாழ்த்துக்களை தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு நன்றி தெரிவிப்பதாக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். நமது மக்களின் நல்வாழ்வு எங்களின் ஒரே குறிக்கோளாக திகழ்கிறது என்று விஜய் கூறியுள்ளார். அரசியலுக்கு அப்பாற்பட்டு மாநில முன்னேற்றம் மற்றும் தமிழ்நாட்டு மக்கள் நலனில் முழுமையாக கவனம் செலுத்தும் என்றும் உறுதிப்பட தெரிவித்துள்ளார். தமிழக அரசுக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கும் என ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: தோற்றாலும் துவளாத திமுக தலைவர்..! நன்றி சொல்ல கொளத்தூருக்கு செல்லும் ஸ்டாலின்..!