×
 

தவெக வேட்பாளர் பட்டியல்! விஜய் இன்று அறிவிப்பு!! விசில் போட தயாராகும் நிர்வாகிகள்! பெரம்பூரில் போட்டி?!

சட்டமன்ற தேர்தலில் தவெக போட்டியிடும் வேட்பாளர்களை விஜய் இன்று அறிவிக்க உள்ளார். இதற்கான கூட்டம் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடக்க உள்ளது

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக வேட்பாளர் தேர்வு மற்றும் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. வேட்புமனு தாக்கல் நாளை (மார்ச் 30, திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறும் என்பதால், பெரும்பாலான கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, மனு தாக்கல் செய்ய தயாராகி வருகின்றன.

ஆளும் தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடித்து வேட்பாளர்களை அறிவித்துள்ளது. எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் தனது முதல் இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, கூட்டணி பங்கீட்டை நிறைவு செய்துள்ளது. நாம் தமிழர் கட்சி ஏற்கெனவே 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை தொடங்கியுள்ளது. பா.ம.க. மற்றும் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகளும் விரைவில் தங்கள் வேட்பாளர்களை அறிவிக்க உள்ளன.

இந்நிலையில், புதிய அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தேர்தல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் முடிவை எடுத்துள்ள த.வெ.க., தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று (மார்ச் 29, ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்க உள்ளது. இதற்கான முக்கிய கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெறும். 

இதையும் படிங்க: 4 நாட்கள் மட்டுமே வாய்ப்பு!! நாளை துவங்குகிறது வேட்புமனு தாக்கல்!! பத்திக்கிச்சு தேர்தல் ஜூரம்!

த.வெ.க. தலைவர் விஜய் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு, தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் புதுச்சேரியின் 30 தொகுதிகளுக்கும் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து உரையாற்ற உள்ளார். வேட்பாளர் அறிவிப்புக்குப் பிறகு, நாளை ஒரே நாளில் பல வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் தானே பெரம்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை (மார்ச் 30) அவர் அங்கு தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. முன்பு பெரம்பூரில் பிரசாரம் செய்ய அனுமதி கோரிய மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், த.வெ.க. புதிய இடத்தை தேர்வு செய்து தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளது. அனுமதி கிடைத்தால் நாளையே பிரசாரத்தை தொடங்கலாம் என்று கூறப்படுகிறது.

பெரம்பூர் தொகுதியில் அ.தி.மு.க. நேரடியாக போட்டியிடவில்லை. அதை கூட்டணி கட்சியான பா.ம.க.வுக்கு ஒதுக்கியுள்ளது. தி.மு.க. நேரடியாக களமிறங்க உள்ளதால், விஜய்க்கும் தி.மு.க. வேட்பாளருக்கும் இடையே கடுமையான போட்டி ஏற்படும் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் விதிமுறைகளை கடைப்பிடித்து பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. விஜய்யின் வேட்பாளர் அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: ஓட்டுக்கு பணம் பட்டுவாடா?! தேர்தல் கமிஷன் கிடுக்குப்பிடி! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share