இன்னும் 2 நாட்கள் தான்... இதுவரை எடுக்காத ரிஸ்க்கை கையில் எடுத்த விஜய்... ஆடிப்போன அரசியல் களம்...!
வரும் 28ம் தேதி முதல் தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்குகிறார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, அறிமுக கூட்டம் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது. நாம் தமிழர் கட்சி சீமான் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தேர்தல் களத்தில் பிரசாரத்தை தொடங்கியுள்ள நிலையில், அதிமுக, வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இன்றைய தினம் திமுக தனது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் விரைவில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடவுள்ளதோடு, தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை வரும் 28ம் தேதி முதல் தொடங்கவுள்ளார். ஒரே நேரத்தில் 5 தொகுதிகளில் வாகன பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரி தவெக தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. முதன் முறையாக விஜய் போட்டியிடவுள்ளதாக கூறப்படும் பெரம்பூர் தொகுதியில் 28ம் தேதி காலை 10 மணி அளவில் எம்.கே.வி.நகரில் பிரசாரத்தை தொடங்கும் விஜய், கொளத்தூர், அண்ணாநகர், வில்லிவாக்கம், விருகம்பாக்கம் என தொடர்ந்து 5 தொகுதிகளில் பிரசாரம் செய்யவுள்ளார்.
பெரம்பூர் முதற்கொண்டு சோளிங்கர் முதல் 12 சட்டமன்ற தொகுதிகளில் பரப்புரை நடத்த தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் ஒரே நாளில் இத்தனை இடங்களுக்கு சென்றால் அசம்பாவிதம் ஏற்படக்கூடும் என தேர்தல் ஆணையம் கூறியதால், மீண்டும் மாற்றங்கள் செய்யப்பட்டு ஒரு நாளைக்கு 5 தொகுதிகளில் பிரசாரம் செய்ய அனுமதி கோரி தேர்தல் ஆணையத்திடம் தமிழக வெற்றிக் கழக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் மனு அளித்துள்ளார்.
இதையும் படிங்க: இப்தார் நோன்பு இனிக்குது?... இஸ்லாமியருக்கு சீட்டு காசக்குதா? - விஜயை அம்பலப்படுத்திய எஸ்.வி.சேகர்...!
அந்த மனுவில் ஒவ்வொரு கூட்டத்திலும் 3 ஆயிரம் வேட்பாளர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாகன பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எலக்ஷன் வந்தாச்சு..!! விஜய் படத்தின் டிரைலர் கூட திரையிடக்கூடாது... தேர்தல் ஆணையத்துக்கு வலியுறுத்தல்..!!