×
 

யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்... வேலூரில் விஜய் களமிறங்கும் முன்பே... தரமான சம்பவம் செய்த தவெக...!

த.வெ.க. தலைவர் விஜய் விநாயகபுரம் என்ற குக் கிராமத்தின் வழியாக  உள்ள தோட்டத்தின் வழியே பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட தற்காலிக சாலையின் வழியாக விழா மேடைக்கு அழைத்து வர ஏற்பாடு

வேலூர் அடுத்த அகரம்சேரியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நாளை காலை 12 மணி முதல் 3 மணி வரை நடக்கிறது. இதில், 4,900 நிர்வாகிகள் மட்டும் பங்கேற்பார்கள் என்றும், அவர்களுக்கு வழங்கப்பட்ட பாஸ் அட்டையை, க்யூஆர் ஸ்கேன் மூலம் அங்கீகரித்து உள்ளே அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தவெக நிர்வாகிகள் சந்திப்புக்கு 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவெக நிர்வாகிகள் சந்திப்பு நாளை 23ம் தேதி நடக்கிறது. அந்த நிகழ்ச்சிக்கு 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 

பாஸ் வழங்கப்பட்ட நபர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர். விஜய் சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக வேலுாருக்கு வருகிறார். வேலூர் மாவட்ட எல்லைக்குள் வரும்போது அவரது வாகனத்தின் பின்னால் வர பிற வாகனங்கள் உடன் செல்ல அனுமதி அளிக்கப்படமாட்டாது.

இதையும் படிங்க: TWIST மேல TWIST..!! அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் தவெகவில் ஐக்கியம்..!!

 அதேபோல் வேலூர் மாவட்ட எல்லையில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் பகுதி வரை 40 கிலோ மீட்டர் உள்ளது. அவர் செல்லும் நேரத்தில் பிற வாகனங்கள் உள்ளே புகுந்துவிடாமல் இருக்க 50 இடங்களில் பேரிகார்டு அமைத்து தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் கட்சி நிர்வாகிகள் மட்டும் சர்வீஸ் சாலை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள். பெங்களூர் நோக்கி செல்லும் வாகனங்கள் மேம்பாலம் மூலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. 

மேலும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தடுக்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு இடையே விஜய் பிரச்சார வாகனம் கூட்டம் நடைபெறும் மைதானம் அருகே உள்ள தனியார் பள்ளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் கூட்டம் நடைபெறும் மைதானத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் விநாயகபுரம் என்ற குக் கிராமத்தின் வழியாக  உள்ள தோட்டத்தின் வழியே பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட தற்காலிக சாலையின் வழியாக விழா மேடைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறும் பள்ளிக்குப்பம் சாலை வழியாக ஒடுக்கத்தூர் செல்லும் சாலை மூடப்பட்டு நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு வரும் கியூ ஆர் கோடு அடங்கிய பாஸ் வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே அந்த சாலையில் செல்ல அனுமதி வழங்கப்படும்.

வெயில் நகரமான வேலூரில் தற்பொழுது 95 டிகிரி வரை வெப்பம் சுட்டெரித்து வருவதால் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெறும் மைதானத்தில பிரம்மாண்ட
கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது.

மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்குத் தடையின்றி குடிநீர் வழங்க 50,000 தண்ணீர் பாட்டில்கள் மற்றும் 6,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டிகள் தயார் நிலையில் உள்ளன. மேலும் அவசர மருத்துவத் தேவைகளுக்காக 10 மருத்துவக் குழுக்கள், 30 மருத்துவர்கள், 100 செவிலியர்கள் மற்றும் 15 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மைதானத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

 

இதையும் படிங்க: “அவன் கிடக்கிறான் லூசு பய”... தவெக முக்கிய நிர்வாகியை ஒருமையில் சாடிய கே.டி.ராகேந்திர பாலாஜி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share