×
 

“யார் பெருசுன்னு அடிச்சிக்காட்டு”... விஜய்  ‘சைலண்ட்’ மூவ் Vs எடப்பாடி ‘வயலண்ட்’ அட்டாக்... ஒரு அலசல்...!!

தங்கள் கூட்டணிக்கு விஜய் நிச்சயம் வருவார் என காத்திருந்து காத்திருந்து ஏமாற்றம் அடைந்த அதிமுக, தற்போது கிடைக்கும் மேடைகளில் எல்லாம் விஜயை சரமாறியாக  குற்றச்சாட்டுகளால் வறுத்தெடுத்து வருகின்றனர்.

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாகவே தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. தங்கள் கூட்டணிக்கு விஜய் நிச்சயம் வருவார் என காத்திருந்து காத்திருந்து ஏமாற்றம் அடைந்த அதிமுக, தற்போது கிடைக்கும் மேடைகளில் எல்லாம் விஜயை சரமாறியாக  குற்றச்சாட்டுகளால் வறுத்தெடுத்து வருகின்றனர். தேர்தல் களத்தில் திமுகாவுக்கும் தாவேக்காவுக்கும் தான் போட்டி என விஜய் கூட்டத்துக்கு கூட்டம் கூறி வருவதையும் வாடிக்கையாக்கி வருகிறார். தவெக மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் பாஜக மற்றும் பலர் என அதிமுக பேரை குறிப்பிடுவதையே தவிர்த்த விஜய், சேலம் பிரச்சாரத்தில் ஊழல் சக்திக்கு என் வீடு எங்கிருக்கு என தெரியுமா? என கேட்டார். செங்கோட்டையனை வைத்துக்கொண்டு ஊழலை பற்றி எங்களுக்கு விஜய் பாடம் எடுக்கலாமா என பதிலடி தந்தது அதிமுக. 

இரண்டாம் கட்ட தலைவர்களின் வார்த்தை போர் அனல் தெரிக்கும் வேளையில் வேலூரில் பிரச்சாரம் மேற்கொண்ட விஜய் இந்த முறையும் திமுக தவெக இடையில் தான் போர். எனக்கும் ஸ்டாலினுக்கும் தான் போட்டி இடையே வான்டடா வந்து சில பேர் வண்டியில் ஏறிக்கிட்டு நச நசன்னு ஒரே பேச்சு என்று அதிமுகாவை கிண்டல் அடித்துள்ளார். உண்மையிலேயே இந்த எலெக்‌ஷன் எதுக்கான எலெக்‌ஷன் சொல்லட்டுமா விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கிற போர். இதுக்கு நடுவுல இந்த என்டிஏ டெல்லி இதெல்லாம் என்ன லாஜிக்குன்னே புரிய மாட்டேங்குதுங்க சார். தமிழ்நாடு தான் விஜய் இந்த விஜய்தான் தமிழ்நாடு. போட்டி ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுல உள்ள தான் ஒன்னு இன்னொன்னு அப்படி இருக்கும்போது நாம ஏதாவது பேசினா வான்டடா சில பேர் வந்து வண்டியில் ஏறி உட்கார்ந்துகிட்டு குரல் கொடுக்கறாங்க வாய் இருக்குன்றதுக்காக நக்கலுமா நையாண்டியுமா நச நச நச நசன்னு ஒரே பேச்சு. சீரியஸ ஒரு போட்டி நடந்துகிட்டு இருக்கும்போது இங்க காமெடிக்கு எல்லாம் இடம் இல்ல பாஸ்.

 களத்தில் அதிமுகாவை விஜய் ஒரு பொருட்டாகவே மதிக்காததன் வெளிப்பாடே இந்த பேச்சு உணர்த்துகிறது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். இந்த சூழ்நிலையில் கடந்த 10 நாட்களாக அதிமுக விஜய் பற்றி விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஏங்க அவருக்கு என்னது ஒரு நிகழ்வு நடந்தது. நான் சொல்லக்கூடாது இப்ப கே்கறதுனால சொல்றேன். ஒரு பிரச்சனை நடந்தது. 72 நாட்கள்ல வீட்ட விட்டே வரல. ஏன் விஜய் வீட்டு வேலை வயிட்டு வேலைன்னு சொல்றாங்கறாங்க. அவரு ஒரு தலைவரான்னு கேட்கதான் செய்வாங்க. 15 நாள் அலுவலத்தையும் மூடிட்டு போயிட்டாங்க. அப்பறம் எங்க போய் கட்சி நடத்தி மக்களுக்கு நன்மை செய்ய போறாங்க. ஒரு பிரச்சனையை சந்திக்கக்கூடிய திறன் கூட அவரிடம் இல்லையே. அவருக்கு இன்னும் அனுபவம் இல்ல. இதுவரைக்கும் இன்னும் பரீட்சை எழுதல. பரீட்சை எழுதினா தான் மதிப்பெண் என்னன்னு தெரியும். இப்பத்தான எழுத போறாரு. எனக்கு முதல்ல வேண்டுகோள் என்னவென்றால் அவர் தமிழ்நாட்டை காப்பாத்துறாரோ தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு ஆபத்துனா ஓடி வர்றாரோ இல்லையோ. அவரை பார்க்க வர்றவங்க செத்து போகாமல் பாதுகாக்கறதுக்கு ஏதாவது ஒரு நடவடிக்கை எடுக்க அவருக்கு முன் வருவாரா?  அனுபவ பாடம் கற்றுக் கொள்வாரா?.  அவருக்கு என்னன்னா எவன் செத்தாலும் சரி, எவன் சுடுகாட்டுக்கு போனாலும் சரி நான் முதலமைச்சர்னு சொல்றதை இந்த தமிழ்நாட்டு மக்கள் எந்த காலத்திலும் ஏத்துக்கிட்டதா வரலாறே இல்லை.

இதையும் படிங்க: அதிமுக சாதனைகள் மீது திமுக சவாரி... என்னதான் ஆச்சு ஸ்டாலினுக்கு? விளாசிய EPS..!!

தவெக  என்பது பரிதாபத்துக்குரிய கட்சியாக இந்த தேர்தலோடு முடிந்துவிடும்.  தவெகவுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதாக கூறுகிறார்கள். ஆமா தாவேக்க பெரிய கட்சியா இருக்கு அழுத்த மத்திய அரசு கொடுக்குது அவங்கல்லாம் லூசுத்தனா போயிட்டு நடக்காங்க. அண்ணா திமுகா திமுகாவுக்கும் எங்களுக்குதான் போட்டி நிக்கிறது. இவங்கல்லாம் நடிச்சுக்கிறது. பெரிய ஒரு கட்சியை எதிர்த்து போராடுற மாதிரி காட்டியாச்சுன்னா கட்சிய மதிச்சிருவாங்களா யார் இருக்காங்க? ஒரு நாள் கூத்துக்கு தாங்குமா அந்த கட்சி, தேர்தலுக்கு அப்புறம் இடத்தை காலி பண்ணிட்டு ஓடிருவாங்க. விஜய் அறையிலே உக்காந்துகிட்டு அரசியல் பண்ண முடியுமா? எங்க தலைவர் பொது வாழ்க்கைக்கு வந்தாரு, எல்லா இடங்களுக்கும் போனாரு, அவர் போனாரா, அவர் போறாரா,  வராரா?.

இதெல்லாம் விட புது கான்செப்ட் 41 பேர் இறந்தாங்க. அங்க குடும்பத்தை சென்னைக்கு கூப்பிட்டு துக்கம் விசாரிக்கிறாரு. இதெல்லாம் பொது வாழ்க்கைக்கு வந்த பிறகு வறுன்னு தான் சொல்றோம்.  வாங்குற சம்பளத்தை நான் வெளிப்படையா, இவ்வளவுதான் வாங்குனேன். நான் டாக்ஸ் கட்டி இருக்கேன்னு சொல்ல முடியுமா? சொல்ல முடியாது விஜயால. கருப்பு அதிகம் வெள்ளை குறைவு. இன்னைக்கு இந்த கட்சி யாருடைய பணத்தில் நடக்குது லாட்டரி பணத்தில் தான் நடக்குது.

“நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்” என வடிவேலு பாணியில் நகர்கிறது இவர்களது பிரச்சாரம் என வலைத்தளங்களில் நெட்டிசன்கள் நக்கல் அடித்தும் வருகின்றனர். தங்கள் கூட்டணிக்கு வராத கோபத்தில் இந்த பிரச்சாரத்தை அதிமுக கூர்ந்தீட்டும் என எதிர்பார்க்கலாம். தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாறி மாறி அனல் பறக்கும் பேச்சுகள் களத்தை இன்னும் சூடாக்க காத்திருக்கின்றன. அதிமுக, எடப்பாடி என பேரை குறிப்பிடாமல் ஒரு வார்த்தையில் கடந்து போகும் விஜய் இனிவரும் காலங்களில் நேரடியாகவே பதிலடி கொடுப்பார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். தேர்தலில் திமுகக்கு யார் போட்டி என்பதிலேயே ஒரு போட்டி நடப்பது களத்தில் சுவாரசியத்தை அதிகரித்துள்ளது. இன்னும் பல ஆச்சரியமான பேச்சுகளை அரங்கேற்ற காத்திருக்கிறது இந்த 2026 தேர்தல். 

இதையும் படிங்க: மு.க. அழகிரியின் வலது கரம் அதிமுகவில் ஐக்கியம்... முன்னாள் துணை மேயர் மன்னன் இபிஎஸ் உடன் சந்திப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share