×
 

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை... இளம்பெண்ணை சீரழித்த தவெக நிர்வாகிகள் கைது...!

பாதிக்கப்பட்ட பெண் இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியை சேர்ந்த இளம் பெண்ணை ஏமாற்றி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் இருவரை பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன். இவர் தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். அவரது நண்பர் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். இவரும் தமிழக வெற்றிக்கழகத்தில் நிர்வாகியாக உள்ளார்.

இவர்கள் இருவரும் ஏரல் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை வேலை வாங்கி தருவதாக காரில் அழைத்துச் சென்று ராமநாதபுரம் அருகே ஏர்வாடி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதையும் படிங்க: அங்கேயும் நுழைச்சிட்டீங்களா?... காவல்நிலையத்திற்குள் ரீல்ஸ் எடுத்த தவெகவினர்... கடும் ஆத்திரத்தில் மக்கள்...!

பாதிக்கப்பட்ட பெண் இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் இருவர் இளம் பெண்ணை அழைத்துச் சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தவெக நிர்வாகி செய்த பகீர் காரியம்... ஸ்டன் ஆன சோழவந்தான்... காலை முதல் நீடிக்கும் பரபரப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share