அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு மோசமான அரசியல் - வைகோ ஆவேசம்!
அண்ணா திமுக ஆட்சி அமைப்பதற்குத் திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு கொடுக்க முனைந்தது உண்மையாக இருக்குமானால், அதைவிடப் பெரிய அரசியல் மோசடி ஒன்று உலகத்தில் இருக்க முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
அண்ணா திமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு கொடுக்க முனைந்தது உண்மையாக இருக்குமானால் அதைவிடப் பெரிய அரசியல் மோசடி இருக்க முடியாது என்றும், முதலமைச்சர் விஜய் சில மாதங்களில் அரசியல் தெளிவு பெற்றுவிடுவார் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரையில் தெரிவித்துள்ளார்.
மதுரை பாண்டிகோவில் பகுதியில் நடைபெற்ற மதிமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய பின்னர், வைகோ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழக அரசியல் நிலவரங்கள் மற்றும் அண்மைய கூட்டணி மாற்றங்கள் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் விரிவாகப் பதிலளித்தார். அதிமுக ஆட்சி அமைக்க திமுக உதவ முன்வந்ததாக எழுந்துள்ள அரசியல் சர்ச்சைகள் குறித்துக் கேட்டபோது, இது ஒரு மிகப்பெரிய அரசியல் மோசடியாகத்தான் இருக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, சட்டமன்றத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் பேச்சு மற்றும் செயல்பாடுகள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த வைகோ, "இன்னும் சில மாதங்களில் அவர் அரசியலைக் கற்றுத் தேர்ந்துவிடுவார்; விரைவில் முழுமையான தெளிவு பெற்றுவிடுவார் என்று நான் நம்புகிறேன்" என்றார். மேலும், சட்டமன்றத்தில் நிலவும் காரசாரமான விவாதங்கள் மற்றும் விமர்சனங்கள் குறித்துத் தான் கருத்து கூற விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "வெறும் 26 இடங்களா? இது மாணவர்களுக்குப் பேரிடி!": குரூப்-1 அறிவிப்புக்கு அதிமுக ஜெயக்குமார் கண்டனம்!
தங்கள் கட்சியின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய அவர், தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காகப் போராடுவதில் எல்லா கட்சிகளையும் விட மதிமுக முன்னணியில் நிற்பதாகக் குறிப்பிட்டார். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, ஓட்டு அரசியலைக் கடந்து தமிழ்நாட்டின் நலனுக்காகக் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளில் மதிமுக தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார். வரும் ஜூன் 27-ஆம் தேதி மதிமுக பொதுக்குழு கூடவுள்ளதாகவும், அதில் முக்கியக் கருத்துக்கள் பரிமாறப்பட்டுப் பொதுக்குழு தீர்மானங்கள் வடித்தெடுக்கப்படும் என்றும் வைகோ தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘ரீல்ஸை’ விட்டுட்டு ‘ரியாலிட்டிக்கு’ வாங்க என முதல்வர் விஜயை சாடிய ஜெயக்குமார்!