×
 

“35 வருஷ அரசியலை வெறும் 2 நிமிஷத்துல”... பாடகர் வேடனை பார்த்து ஷாக்கான திருமா - என்ன செய்தார் தெரியுமா?

கேரளாவை சேர்ந்த பிரபல ராப் இசை பாடகர் வேடனுடன் விடுதலை சிறத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வீடியோ காலில் பேசியுள்ளார். 

2020ம் ஆண்டு கொரோனா காலத்தில் யூடியூப்பில் வெளிவந்த வேடனின் “வாய்ஸ் ஆஃப்தி வாய்ஸ்லெஸ்” என்ற ஆல்பம் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்தது. அதனையடுத்து சாதிய அடக்குமுறை தொடர்பாக வேடன் பாடிய  “நான் பாணன் அல்ல பறையன் பாடல்” சர்ச்சையையும், பாராட்டுகளையும் குவித்தது.  மலையாள திரையுலகில் பாடகர் மற்றும் பாடலாசிரியராகவும் வேடன் பணியாற்றியுள்ளார். 

அண்மையில் வேடன் பாடிய பாடல் பிரதமர் மோடியையும் வலதுசாரி அமைப்புகளையும் விமர்சிப்பதாக அமைந்தது. இதனை தொடர்ந்து அவரை என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும் என்று பாஜகவைச் சேர்ந்த ஒருவர் புகாரளித்த நிலையில் வேடன் மீது பலரது கவனம் திரும்பியது. இந்த நிலையில் வேடனுடன் திருமாவளவன் வீடியோ கால் பேசியுள்ளார். திருமாவளவனை கேரளாவில் உள்ள தமது வீட்டுக்கு வருமாறு வேடன் அழைத்துள்ளார். 

இதையும் படிங்க: என் தங்கச்சி கனிமொழியை பார்க்க பெருமையா இருக்கு...பாசத்துடன் வாழ்த்திய முதல்வர்!

அந்த வீடியோவில் கேரளாவில்  எங்க இருக்கீங்க என திருமாவளவன் கேட்க, திருச்சூர் என்கிறார் வேடன். அதற்கு திருமா கேரளாவிற்கு அடிக்கடி வருவேன் எனக்கூற, அடுத்தமுறை வந்தால் கட்டாயம் எங்க வீட்டுக்கு வாங்க என்கிறார். திருச்சூரில் டவுன்ல இருக்கீங்களா? என்று திருமாவளவன் கேட்க, டவுனில் இருந்து 8 கிலோ மீட்டர் தான். நீங்கள் நல்லா ஆரோக்கியமா இருப்பீங்க என்கிறார் வேடன். 

உங்க பாடல்ல சொல்லப்படுற கருத்து இருக்கு இல்லையா அது ரொம்ப புரட்சிகரமா இருக்கு. நல்லா இருக்கு. நாங்க 35 வருஷமா பேசுற அரசியலை நீங்க ஒரு ரெண்டு நிமிஷ பாட்டுல சொல்லிடுறீங்க என திருமாவளவன் பாராட்டியுள்ளார். 
 

இதையும் படிங்க: காவு வாங்கிய ஆன்லைன் ரம்மி... கல்லூரி பேராசிரியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சோகம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share