ஷாநவாஸ்-க்கு சீட் தராதது ஏன்? - இந்த ஒரே ஒரு காரணம் தான்.. திருமா வெளியிட்ட திடீர் வீடியோவால் பரபரப்பு...!
திமுகவுடன் நெருக்கமாக இருக்கிறார்கள் என்ற காரணத்தினால் சட்டமன்ற தேர்தலில் எஸ்.எஸ்.பாலாஜி, ஷானவாஸ் மற்றும் பனையூர் பாபு ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டதாக வரும் தகவல்கள் உண்மையல்ல
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றுதான் இந்த முறை சிலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக விடுதலை சிறத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவில், திமுகவுடன் நெருக்கமாக இருக்கிறார்கள் என்ற காரணத்தினால் சட்டமன்ற தேர்தலில் எஸ்.எஸ்.பாலாஜி, ஷானவாஸ் மற்றும் பனையூர் பாபு ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டதாக வரும் தகவல்கள் உண்மையல்ல என திருமாவளவன் விளக்கம் அளித்திருக்கிறார்.
திராவிட முன்னேற்ற கழகத்திலே கூட 60 புதிய முகங்களுக்கு வாய்ப்பு தந்திருக்கிறார்கள். அப்படி என்றால் 60 பேர் பழைய சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. அதை பற்றி யாருமே பேசவில்லை. விடுதலை சிறுத்தைகளை பற்றி மட்டும் பேசுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் எடுத்த முயற்சிக்கு திருமாவளவன் இணங்காமல் திமுக கூட்டணியை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கு முதன்மை காரணியாக இருந்திருக்கிறான் என்பதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை, சகித்துக் கொள்ள முடியவில்லை நம் மீது அவர்களுடைய காழ்புனர்ச்சியை கொட்ட வேண்டும் கக்க வேண்டும் என்பது அடிப்படை காரணம். கம்யூனிஸ்ட் கட்சிகளில் கூட சென்ற முறை வென்றவர்கள் இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறார்கள். யாரும் அதை பேசவில்லை. ஒவ்வொரு கட்சியிலும் இது நடைமுறையில் இருப்பதுதான்.
ஒவ்வொரு கட்சியிலும் இது நடைமுறையில் இருப்பதுதான் வெற்றி பெற்றவர்களுக்கே திரும்ப திரும்ப தருவது என்பது இயலாத ஒன்று. இந்த முறை அந்த இரண்டு பேருக்கும் மூன்று பேருக்கே மீண்டும் கொடுத்திருந்தால் புதிய மூன்று பேருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கும். ஆக இந்த முறை இஸ்லாமியர் ஒருவருக்கு கிறித்தவர் ஒருவருக்கு வழங்க வேண்டும் என்கிற அடிப்படையில் தான் பண்ருட்டியில் ஒரு இஸ்லாமியருக்கும் திருப்போரூர் ஒரு கிறித்தவருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இது என்னுடைய நிலைப்பாடு அவர்களுக்கு வழங்கவில்லை என்பதற்கு இதுதான் காரணமே தவிர வேறொன்றுமில்லை.
இதையும் படிங்க: திருமாவளவனுக்கு எதிரான வழக்கு... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!
செய்யூர் தொகுதியை பொறுத்தவரையில் மீண்டும் அதை நான் உங்களுக்கு விளக்க கடமைப்பட்டிருக்கிறேன். என்னை நம்பி என்னோடு களத்தில் நிற்கிற நீங்கள் அதில் தெளிவாக இருக்க வேண்டும். எனக்கு எதிராக எவ்வளவோ அவதூறுகளை பலரும் பரப்புகிறார்கள் அதை நான் காதில் போட்டு கொள்வதில்லை ஆனால் நீங்கள் என்னோடு 30, 35 ஆண்டுகளாக கைகோர்த்து களத்தில் நிற்கிற என் உயிருக்கு உயிரான விடுதலை சிருத்தைகள் தெளிவோடு இருக்க வேண்டும்.
நான் இந்த தேர்தலில் போட்டியிடுவது என்று எடுத்த முடிவின் காரணமாக ஒரு அதிர்ச்சி அல்லது. பலருக்கும் உயப்பை தருகிற ஒரு நிலை உருவானது ஏன் என்ன காரணம்? இவர் எம்பியாக இருக்கிறார் இன்னும் மூன்று ஆண்டுகள் பதவி காலம் இருக்கிறது. எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று ஏன் இவர் முடிவெடுத்தார். பலரும் தங்களுடைய யூகங்களை எல்லாம் செய்திகள் ஆக்கிக் கொண்டிருந்தார்கள். அதற்குரிய காரணங்களை நான் விளக்கி இருக்கிறேன். நான் தேர்தலில் போட்டியிட போகிறேன் என்பது குறித்து முன்கூட்டியே யாரிடத்திலும் நான் விவாதிக்கவில்லை. அதற்கு காரணம் அதிலே எனக்கு ஒரு இரண்டாவது கருத்தும் இருந்ததுதான் வேண்டாம் என்கிற இரண்டாம் கருத்தும் இருந்தது. போட்டியிட வேண்டும் என்கிற ஒரு கருத்தும் இருந்தது. வேண்டாம் என்கிற ஒரு கருத்தும் இருந்தது. ஆகவே இது குறித்து நான் முன்னணி தோழர்களிடத்திலே பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணி தோழர்களிடத்திலே முன்கூட்டியே கலந்து பேசவில்லை எனக்கூறியுள்ளார்.
இதையும் படிங்க: விசிக-வில் சீட் கிடைக்காத எம்.எல்.ஏ-க்கள் அதிருப்தி!! கட்சி பதவி வழங்கி சரிகட்டும் திருமாவளவன்!!