×
 

மோடி மீண்டும் மீண்டும் தமிழகம் வர வேண்டும்... ரெக்வஸ்ட்-யில் ட்விஸ்ட் வைத்த கி.வீரமணி...!

ஒவ்வொரு மோடியின் வருகையும் தமிழ்நாட்டிலே திராவிட முன்னேற்ற கழகத்தின் வெற்றி கூட்டணிக்கு உரமிடுவதாக உள்ளது என கி.வீரமணி கருத்து

ஐநா சபை குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருக்கிறது. மோடி தொடர்ந்து தமிழகத்திற்கு வர வேண்டும்.ஒவ்வொரு மோடியின் வருகையும் தமிழ்நாட்டிலே திராவிட முன்னேற்ற கழகத்தின் வெற்றி கூட்டணிக்கு உரமிடுவதாக உள்ளது  என திருவாரூரில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி  தெரிவித்துள்ளார். 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி இன்று காலை ரயில் மூலம் திருவாரூர் வந்தடைந்தார். இதனை தொடர்ந்து நாகப்பட்டினம் கிளம்புவதற்கு முன்பு திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த திராவிட கழக தலைவர் கி வீரமணி பேசியதாவது:  ஏற்கனவே மம்தா பானர்ஜி வெளிப்படையாகவே ஒரு பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். தேர்தல் நிதி சம்பந்தமாக வந்த பிரச்சனையில் தேர்தல் கமிஷன் நடந்து கொண்ட முறையும், இப்போது தொடர்ந்து எஸ்ஐஆர் அனுமதி குறிப்பிட்ட எதிர்க்கட்சி மாநிலத்திற்கு மட்டுமே செய்து எல்லாம் அவர் முழுக்க முழுக்க முழுக்க காவிமயமாக்கப்பட்டிருக்கிறார் என்பதற்கான  அடையாளம்.

உச்சநீதிமன்றம் போல இருக்க வேண்டிய தேர்தல் கமிஷன் முழுக்க முழுக்க  ஆட்சியாளர்களுடைய இன்னொரு பிரிவாக, கிளையாக அமைந்து கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகளின் இந்த தீர்மானத்தின் மூலம் உலகத்துக்கே இது வெளிச்சமாகும்.  இந்த தீர்மானத்தின் மூலமாக அவர் எப்படி நடந்து கொள்கிறார், அவரது நடத்தை என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது அல்ல என்பதை உலகிற்கு அறிவிக்கும் தீர்மானம் இது. இதுவரை சபாநாயகர் மீதாவது பலமுறை பதவி நீக்க தீர்மானம் வந்திருக்கிறது. ஆனால் தேர்தல் கமிஷனர் மீது நம்பிக்கை இல்லை என்று சொல்வது இது முதல் முறை. நாடாளுமன்றத்தில் இது பிரதிபலிக்கிறது. லட்சக்கணக்கில் வாக்காளர்களின் உரிமை பறிக்கப்பட்டு இருக்கிறது. தேர்தலை நடுநிலையாக இருந்து சுதந்திரமாக நடத்துவதற்கு அவரது கடமையை அவர் செய்யவில்லை.

இதையும் படிங்க: தலைவிரித்தாடும் தட்டுப்பாடு.. ஈரான் அதிபருக்கு போன் போட்ட மோடி... இந்திய கப்பல்களுக்கு வழி பிறக்குமா?

போரற்ற உலகை உருவாக்க வேண்டும், போரில் இறந்தவர்கள் இந்தியர்களாக இருந்தாலும் சரி அல்லது மற்ற நாட்டினராக இருந்தாலும் சரி மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டு போரற்ற புதிய உலகம் உருவாக அனைவரும் நிணைக்க வேண்டும். ஆனால் இதை கண்டிப்பாக கவனிக்க வேண்டிய ஐநா சபை குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருக்கிறது. 

தமிழ்நாட்டில் தொடர்ந்து தேர்தலுக்காக பிரதமர் மோடி மீண்டும் மீண்டும் வருகை குறித்த கேள்விக்கு, மோடி தொடர்ந்து தமிழகத்திற்கு வர வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை. ஏனென்றால் திமுகவுக்கு வாக்களிப்பு அதிகமாக கொண்டிருக்கக் கூடிய வாய்ப்பை தெரிந்தோ தெரியாமலோ, தெரிந்தோ புரியாமலோ மோடி அளித்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு மோடியின் வருகையும் தமிழ்நாட்டிலே திராவிட முன்னேற்ற கழகத்தின் வெற்றி கூட்டணிக்கு உரமிடுவதாக உள்ளது என்றார்.

இதையும் படிங்க: விவசாய நண்பன் போல் கபட நாடகம்... பிரதமரை வறுத்தெடுத்த அமைச்சர் ரகுபதி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share