×
 

எகிறும் ஆம்னி பேருந்து கட்டணம்..! கொள்ளையடிக்கும் அவலம்... வேல்முருகன் காட்டம்..!!

ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என வேமுருகன் கோரிக்கை விடுத்து உள்ளார்.

ஆம்னி பேருந்துகளின் கட்டண உயர்வு குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் கவலை தெரிவித்துள்ளார். தொடர் விடுமுறை மற்றும் பண்டிகைக் காலங்களில் வெளியூர்களுக்குப் பயணிக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை இயல்பாகவே பன்மடங்கு அதிகரிக்கிறது. இத்தகைய சூழலில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் முன்பதிவு விரைவாக முடிந்துவிடுவதால் கணிசமான பயணிகள் தனியார் ஆம்னி பேருந்துகளையே சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இக்காலகட்டங்களில் இணையவழி முன்பதிவுத் தளங்களில் பேருந்துக் கட்டணங்கள் வழக்கத்தை விடப் பெருமளவில் உயர்த்தப்படுவதாகப் பயணிகள் முன்வைக்கும் தொடர் புகார்கள் கவலைகளை ஏற்படுத்துகின்றன. தேவை அதிகரிக்கும் போது கட்டணம் உயர்த்தப்படுவது இயல்பு எனக் கூறப்பட்டாலும் இது சாமானிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் பயணச் செலவைக் கடுமையாகப் பாதிக்கிறது என அவர் குறிப்பிட்டார்.

ஆம்னி பேருந்துகளின் இத்தகைய கட்டணக் கொள்ளைக்கு அரசுக்கும் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசும் போக்குவரத்துத் துறையும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை அமல்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: சாட்டையைச் சுழற்றிய தமிழ்நாடு அரசு... ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு பறந்த அதிரடி எச்சரிக்கை...!

வழித்தடங்களின் தூரம் மற்றும் பேருந்து வசதிகளுக்கு ஏற்ப சீட்டர், ஸ்லீப்பர், ஏசி போன்றவற்றுக்கு அரசு நிர்ணயித்த அதிகாரப்பூர்வ அதிகபட்சக் கட்டணப் பட்டியலை இணையதளம் மற்றும் பேருந்து நிலையங்களில் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று அவர் கோரினார். தனியார் பயண முன்பதிவு செயலிகள் மற்றும் இணையதளங்களில் நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பை விடக் கூடுதல் கட்டணம் பட்டியலிடப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய டிஜிட்டல் கண்காணிப்பு முறையை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

 

இதையும் படிங்க: திமுகவின் ‘பவர் புரோக்கர்’... சி.எம். சொன்ன அதே பெயரைச் சொல்லி அறிவாலயத்தை அதிரவிட்ட சிடிஆர்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share