×
 

6 மணிக்கே நடையை கட்டிய விஜய்! அப்படி என்னதான் ஆச்சு? திருப்பூர், சென்னை பிரசாரம் பாதியில் முடிய காரணம்?

கிட்டத்தட்ட 10 முறை விஜய் பிரசாரம் முழுவதுமாகவோ அல்லது பாதியிலோ ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய்யின் பிரசாரம் என்றாலே இளைஞர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுவது வழக்கம். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால் சமீப காலமாக அவரது பிரசார நிகழ்ச்சிகள் அடிக்கடி ரத்து செய்யப்படுவதும் பேசுபொருளாகி வருகிறது.

இதுவரை கிட்டத்தட்ட 10 முறை விஜய்யின் பிரசாரம் முழுவதுமாகவோ அல்லது பாதியிலோ ரத்து செய்யப்பட்டுள்ளது. சில சமயங்களில் போலீசார் அனுமதி மறுப்பதாலும், தேர்தல் ஆணையம் தடை விதிப்பதாலும், வேறு சில சமயங்களில் விஜயே தானாக ரத்து செய்வதாலும் இந்த நிலை ஏற்படுகிறது.

நேற்று முன்தினம் திருப்பூரில் தாமதம் காரணமாக அனுமதி பெற்ற 6 கிலோமீட்டர் ரோட்ஷோ கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. போலீசார் எச்சரித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: வண்டியில உட்காந்துக்கிட்டு கை காட்டுறது இல்ல அரசியல்! விஜயை வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

இந்நிலையில் நேற்று சென்னையில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. டி.நகர், ஆயிரம் விளக்கு, எக்மோர் உள்ளிட்ட பகுதிகளில் விஜய் ரோட்ஷோ செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. 8 மணி வரை அனுமதி இருந்த நிலையில், மாலை 6 மணிக்கு பிரசாரத்தை திடீரென ரத்து செய்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

இதனால் அவரைப் பார்க்க ஆவலுடன் காத்திருந்த தவெக தொண்டர்களும் ரசிகர்களும் பெரும் ஏமாற்றத்துக்கு ஆளானார்கள். புரசைவாக்கம் பகுதியில் அவரைப் பார்க்க பெரும் கூட்டம் கூடியிருந்தது. மாவட்ட செயலாளர் பூக்கடை குமார் மக்களுக்கு பாதுகாப்பாக கலைந்து செல்ல அறிவுறுத்தினார்.

தவெக வட்டாரங்கள் தெரிவித்ததாவது: சென்னை டி.நகர் வேட்பாளர் ஆனந்த், ஆயிரம் விளக்கு வேட்பாளர் பிரபாகரன், எக்மோர் வேட்பாளர் ராஜ்மோகன் ஆகியோரை ஆதரித்து விஜய் பிரசாரம் செய்ய இருந்தார். மூன்று புள்ளிகளில் திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சியில் புரசைவாக்கம் கடைசி இடம். அங்கு செல்லும் போது நேரம் 6:10 மணிக்கு மேல் ஆனதால் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.

மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கரூர் சம்பவத்துக்குப் பிறகு இரவு நேர பிரசாரத்தை விஜய் விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு இரவில் அவர் ஒரு முறை கூட பிரசாரம் செய்யவில்லை. இதுவும் பிரசாரம் ரத்துக்கான முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

ரூட் மாற்றம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயமும் இருந்ததாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் விஜய் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை. விஜய்யின் பிரசார ரத்துகள் தொடர்பாக அரசியல் களத்தில் பெரும் விவாதம் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: திமுகவையும், டீக்கடையும் பிரிக்க முடியாது!! இதுதான் நாம வளர்ந்த இடம்!! முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share