×
 

முதல்வர் விஜய் கையில் எடுத்த 2 துறைகள்! 6 மாதம் டார்கெட்! அதிரடி மாற்றத்திற்கு தயாராகும் தவெக அரசு!

நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ஆறு மாதங்களை இலக்காக வைத்து பணியாற்ற, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை: தமிழக நகர்ப்புறங்களை சுத்தமான, பசுமையான சர்வதேச தரத்துக்கு உயர்த்தும் நோக்கில் ஆறு மாத கால அவகாசத்தை இலக்காக வைத்து தீவிர நடவடிக்கைகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆட்சியில் தனி அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையை தற்போது முதல்வர் நேரடியாக கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கினார். நகராட்சி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தினசரி காலையில் கள ஆய்வுக்கு செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டார்.

கமிஷனர் முதல் கீழ்மட்ட அதிகாரிகள் வரை சாலைகள், பகுதிகளுக்கு நேரில் சென்று குப்பை, கட்டட கழிவுகள், சுவர் போஸ்டர்கள் உள்ளிட்டவற்றை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையோரங்கள் மற்றும் சென்டர் மீடியன்களில் பசுமைப் பரப்பை பெருமளவில் அதிகரிக்கும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: பெட்ரோல் பங்கை சுறையாடிய போதை ஆசாமிகள்! எரிபொருள் நிரப்பும் இடத்தில் சிறுநீர் கழித்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்!

குப்பை மேலாண்மையில் பெரும் மாற்றத்தை கொண்டு வர முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். வீடுகளிலேயே குப்பையை தரம் பிரித்து கொடுக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்த வேண்டும். ஒரே இடத்தில் குவித்து கொட்டும் நடைமுறையை முழுமையாக ஒழித்து, மறுசுழற்சி மற்றும் அறிவியல் ரீதியான முறையில் கழிவுகளை அகற்றும் திட்டங்களை துரிதப்படுத்த வேண்டும். இந்தப் பணிகளை சரியாக செய்யாத அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய் தானே பல நகரங்களுக்கு நேரடியாக ஆய்வுக்கு வருவார் என்பதால், அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகங்களும் உஷார்ப்படுத்தப்பட்டுள்ளன. நகர்ப்புறங்களை மக்கள் வாழ்வதற்கு ஏற்ற சுகாதாரமான, பசுமையான இடங்களாக மாற்றுவதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த திட்டம் வெற்றி பெற்றால் தமிழக நகரங்கள் சர்வதேச அளவில் பாராட்டத்தக்க முன்மாதிரியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரிகள் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றினால் ஆறு மாதங்களில் கணிசமான மாற்றத்தை காண முடியும் என்ற நம்பிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திருட சென்ற கடைக்கு தீ வைத்த வாலிபர்! கலெக்‌ஷன் கம்மியாக இருந்ததால் ஆத்திரம்!! கடையநல்லூரில் விநோதம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share