×
 

காலில் விழுந்தார் விஜய்... சோர்ந்து போயிட்டாரு மனுஷன்! மனைவி, மகளை இழந்த நபர் பேட்டி...!

கரூர் சம்பவத்திற்கு விஜய் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாக கூட்ட நெரிசலில் மனைவி மற்றும் மகளை இழந்த நபர் தெரிவித்தார்.

கரூர் நகரின் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் பெரும் கூட்டத்தை ஈர்த்தது. ஆனால், இந்த ஆர்வமே துயரத்தின் விதையாக மாறியது. விஜய் மேடையில் பேசத் தொடங்கியதும், கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் வெடித்தது. விஜயின் சுற்றுப் பயணத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

சம்பவம் நடந்த உடனேயே, விஜய் சென்னைக்கு தனி விமானத்தில் திரும்பினார். அது ஒரு தவறான முடிவாகத் தோன்றியது. பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்காமல், போலீஸ் அனுமதி கோராமல் விலகியது அவருக்கு எதிராக கடும் விமர்சனங்களைத் தூண்டியது. விஜய் ஏன் கரூருக்கு வரவில்லை என்ற கேள்வி சமூக வலைதளங்களில், ஊடகங்களில் பரவியது.

கரூர் கூட்ட நெரிசலில் குடும்பங்களை மாமல்லபுரத்தில் நட்சத்திர விடுதியில் தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறினார். விஜய் கரூருக்கு செல்ல இருந்த நிலையில் அந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களை சென்னைக்கு வரவழைத்து உள்ளார். கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரிடம் பேசிய விஜய் அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், மன்னிப்பு கேட்டார்.

இதையும் படிங்க: தவெக செய்த தகிடுதத்தம்... ரூ.20 லட்சத்தை விஜய்க்கே திருப்பி அனுப்பிய கணவரை இழந்த பெண்...!

இந்த நிலையில், காலில் விழுந்து விஜய் அழுததாக கரூர் சம்பவத்தில் மனைவி மற்றும் மகளை இழந்த சக்திவேல் என்பவர் தெரிவித்துள்ளார். உங்கள் குடும்பத்தில் ஒருவராக தன்னை இணைத்துக் கொள்ளுமாறு விஜய் தெரிவித்ததாக கூறினார். மாமல்லபுரம் வரவழைத்ததற்கு மன்னித்துக் கொள்ளுமாறு காலில் விழுந்து அழுதார் என்றும் தனது மனைவி மற்றும் மகளின் புகைப்படத்தை காண்பித்த போது விஜய் கண்ணீர் விட்டார் என்றும் விஜய் மிகவும் சோர்ந்து விட்டார் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: கரூர் துயர குடும்பங்கள்: மாமல்லபுரத்தில் விஜய்யின் ஆறுதலுக்குப் பின் கரூர் புறப்பட்டனர்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share