×
 

முதல்வர் விஜய்யின் நெற்றியில் திடீர் மாற்றம்! கருப்புக்கு பதில் சிகப்பு பொட்டு?! எதிரிகளை வெல்லும் கஜகேசரி திலகம்!

அது குங்குமமாக இருக்கலாம் என்றும், சிலர் குறிப்பிட்ட வகை திலகமாக இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். குறிப்பாக, எதிரிகளை எதிர்கொள்ளும் வலிமையை குறிக்கும் திலகம் என்ற கருத்தும் பரவி வருகிறது.

சென்னை: தமிழக சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதல்வர் விஜய் இன்று பதிலுரை அளித்து வரும் நிலையில், அவரது தோற்றத்தில் ஏற்பட்ட ஒரு சிறிய மாற்றம் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. வழக்கமாக நெற்றியில் கருப்பு நிற பொட்டு வைத்திருக்கும் விஜய், இன்று சிகப்பு நிற பொட்டுடன் சட்டசபைக்கு வந்திருந்தார்.

தமிழக சட்டசபையின் தற்போதைய கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவடைய உள்ளது. இதற்கிடையே கடந்த வியாழக்கிழமை சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஏற்பட்டதாக கூறப்படும் பல்வேறு விவகாரங்களை சுட்டிக்காட்டி, அதற்கு முதல்வர் விஜய் உரிய பதில் அளிக்கவில்லை என விமர்சித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த விஜய், அனைத்து கேள்விகளுக்கும் திங்கள்கிழமை பதில் அளிப்பதாகவும், அப்போது அனைவரும் அவையில் இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். விஜய்யின் இந்த பேச்சை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினும் சட்டசபைக்கு வெளியே விமர்சனம் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: மழையில் நனையும் நெல்மணிகள்.. உடனே கொள்முதல் செய்க! பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை!

இந்த நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபை கூடியபோது முதல்வர் விஜய் அவைக்கு வந்தார். வழக்கம்போல் சக உறுப்பினர்களுக்கு வணக்கம் தெரிவித்த அவர், தொடர்ந்து நடைபெற்ற அலுவல் பணிகளில் பங்கேற்றார். பின்னர் காவல்துறை மானியக் கோரிக்கை தொடர்பான விவாதத்திற்கு பதிலுரை வழங்கத் தொடங்கினார்.

இதன்போதுதான் அவரது நெற்றியில் வழக்கமான கருப்பு பொட்டுக்கு பதிலாக சிகப்பு நிற பொட்டு இருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்தது. ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக ஆளுநர் மாளிகைக்கு சென்ற காலகட்டத்திலிருந்தே விஜய் கருப்பு நிற பொட்டு அணிந்து வந்ததாக கூறப்படுகிறது.

இன்றைய சிகப்பு பொட்டு குறித்து பல்வேறு விதமான கருத்துகள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகின்றன. அது குங்குமமாக இருக்கலாம் என்றும், சிலர் குறிப்பிட்ட வகை திலகமாக இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். குறிப்பாக, எதிரிகளை எதிர்கொள்ளும் வலிமையை குறிக்கும் திலகம் என்ற கருத்தும் பரவி வருகிறது.

ஆனால் விஜய் இன்று சிகப்பு பொட்டு அணிந்ததற்கான காரணம் குறித்து அவரது தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. எனவே, இந்த மாற்றத்துக்கு பின்னால் குறிப்பிட்ட அரசியல் அல்லது ஆன்மிக காரணம் இருப்பதாக உறுதியாக கூற முடியாது.

இதற்கிடையே, உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த விமர்சனங்களுக்கு விஜய் இன்று சட்டசபையில் அளிக்கும் பதில் என்னவாக இருக்கும் என்பதே அரசியல் வட்டாரத்தின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க: உதயநிதி vs விஜய்!! அனைத்து கேள்விகளுக்கும் முதல்வர் பதில் அளிப்பார்! அமைச்சர் அருண்ராஜ் அதிரடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share