×
 

விவசாய கடன் தள்ளுபடி… லஞ்சமில்லா நெல் கொள்முதல்.. தஞ்சையில் விஜய் மாஸ் வாக்குறுதி..!

தஞ்சையில் நடந்த தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் உரையாற்றினார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செங்கிப்பட்டி அருகே நடைபெற்ற தமிழகத்தில் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் விஜய் பச்சைத் துண்டுடன் கலந்து கொண்டார். தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார்.

தமிழக வெற்றி கழக ஆட்சி அமைந்த உடன் உரத்தட்டுப்பாடு சரி செய்யப்படும் என்றும் கூட்டுறவு பயிர் கடன் ரத்து செய்யப்படும் எனவும் விஜய் வாக்குறுதி கொடுத்தார். ஐந்து ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் வேளாண் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர் கடன் ரத்து செய்யப்படும் என்ற தெரிவித்துள்ளார்.

ஐந்து ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளின் வங்கி கடனை 50 சதவீதம் ரத்து செய்வதற்கான சாத்தியக்கூறு ஆராயப்படும் என்று கூறியுள்ளார். 2 ஏக்கர் விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயி பிள்ளைகளின் பொறியியல், மருத்துவ படிப்பு செலவை தமிழக வெற்றிக்கழக அரசே ஏற்கும் என்ற தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அதனை முழுமூச்சாக தமிழக வெற்றிக்கழகம் எதிர்க்கும் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மணல் மாஃபியாக்களுக்கு திமுக ஆதரவு… தமிழ்நாடே திவால்..!! பொளந்து கட்டிய விஜய்..!!

பரந்தூர் விமான நிலையம் உள்ளிட்ட விவசாயிகளுக்கு எதிரான எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்ற மாட்டோம். என்று விஜய் தெரிவித்தார். நெல் கொள்முதல் செய்யவோ, மூட்டைகளை ஏற்றி, இறக்கவும் லஞ்சம் பெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். 500 ரேஷன் கார்டுகளுக்கு ஒரு ரேஷன் கடை, அரிசி தவிர மற்ற அனைத்து பொருட்களும் பாக்கெட் செய்து விற்பனை செய்யப்படும் என்றும் விஜய் வாக்குறுதி அளித்தார். 

இதையும் படிங்க: ஓம் சக்தி…பராசக்தி… திமுக ஒரு தீய சக்தி..!! தஞ்சையில் விஜய் அனல் தெறிக்கும் பேச்சு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share