கருத்துக் கணிப்பால் அலர்ட் ஆன விஜய்... கடைசி நேரத்தில் எடுத்த ‘மேஜிக்’ முடிவு... இதுதான் காரணமா?
தொங்கு சட்டசபை ஏற்பட்டால் என்ன செய்வது என விஜய் ஆலோசித்திருப்பதாக சொல்லப்படும் நிலையில் சில முக்கிய தகவல்கள் கசித்துள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில், தமிழகத்தில் தொங்கு சட்டசபை ஏற்பட வாய்ப்பிருப்பதாகவே பெரும்பான்மையான கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்திருந்தன. அதனையடுத்து தொங்கு சட்டசபை ஏற்பட்டால் என்ன செய்வது என விஜய் ஆலோசித்திருப்பதாக சொல்லப்படும் நிலையில் சில முக்கிய தகவல்கள் கசித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில் நேற்றைய தினம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. அதேபோல சில அறிவுரைகளும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கியமாக குதிரை பேரம் நடந்துவிடக்கூடாது என்பதற்காக ஒரு முன்னெச்சரிக்கையாக சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாகவே பார்க்கப்படுகிறது. தவெக 234 சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதாக வேட்பாளர்களை விஜய் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தினார். இந்த சூழலில் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் ஒரு வேட்பாளரை மட்டும் விலைக்கு வாங்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில் கருத்து கணிப்புகள் அதாவது எக்ஸிட் போல் கருத்து கணிப்பின் படி ஐந்திலிருந்து ஒரு 10 தொகுதி வெற்றி பெறுகிற பட்சத்தில அது தொங்கு சட்டசபை ஏற்படும். அப்பொழுது கூட்டணி அமைத்தோ அல்லது அந்த வெற்றி பெறக்கூடிய அந்த குறிப்பிட்ட வேட்பாளர்களை வைத்து விஜய் கணக்கு போடுவதாகவே கூறப்படுகிறது.
இந்த சூழலில்தான் தொங்கு சட்டசபை குறித்து விஜய் காய் நகர்த்துவதாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் தொங்கு சட்டசபை வந்தால் என்ன செய்வது என விஜய் ஆலோசித்ததாகவே தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பல கருத்து கணிப்புகள் தொங்கு சட்டசபை என கணிப்புகள் வெளியாகி இருக்கக்கூடிய சூழலில், அடுத்த கட்ட நடவடிக்கைகளை விஜய் முன்னெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தனது கட்சியிலிருந்து வெற்றி பெற்றவர்கள் குதிரை பேரத்தில் விலை போகாமல் இருப்பதற்கான இந்த நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: விஜய் விவாகரத்து வழக்கில் திடீர் மாற்றம்... வழக்கை விசாரித்த நீதிபதிக்கு பறந்து வந்த அதிரடி உத்தரவு...!
நான் பனையூரில் தான் காத்துக் கொண்டிருப்பேன். வெற்றி பெற்ற உடனேயே வேறு எங்கும் சென்று விடாதீர்கள் என்று மறைமுகமாகவே அவர் கூறியிருக்கிறார். ஏற்கனவே எடப்பாடி வேட்பாளர் விலை போனதாக கூறப்படுவதை அடுத்து விஜய் கூடுதல் கவனம் செலுத்துவதாகவே இதை பார்க்கப்படுகிறது. காரணம் கணிசமான கருத்து கணிப்புகளின் படி குறிப்பிட்ட சில தொகுதிகளில் விஜய் கட்சியினர் வெற்றி பெறுகிறார் என்ற பட்சத்தில், பெரிய கட்சிகள் விலைக்கு வாங்குவது கூடும் என்ற ஒரு தகவலும் கிடைக்க பெற்றிருக்கிறதுதான் காரணம்.
வட மாநிலங்களில் கடந்த காலகட்டத்தில இது போன்ற நிகழ்வுகள் நடந்திருக்கிறது. அதற்கு முன்னெச்சரிக்கை ஏற்பாடாகவே விஜய் இந்த ஆலோசனை கூட்டத்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. வெற்றி பெறுபவர்களை கொண்டு தவெகவின் பலத்தை அதிகரிக்க திட்டம் போட்டிருப்பதாகவே கருதப்படுகிறது. மற்ற கட்சியினரின் பேரத்திற்கு அடிபணியாமல் இருக்கவே வெற்றியாளர்களை அழைத்ததாகவும் கூறப்படுகிறது. அதேபோல தமிழக கட்சி கழகம் ஏறத்தாழ 5-லிருந்து 10 தொகுதி வரை வெற்றி பெறக்கூடும் எனும் கூறப்படுகிறது. பல்வேறு கருத்து கணிப்புகளும் இதையேதான் சொல்கிறது.
ஆனால் 1967 மற்றும் 1977 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை போலவே 2026 ஆம் ஆண்டும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என தவெக நம்புகிறது. தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் ஆக்சிஸ் மை இந்தியா வெளியிட்டுள்ள எக்ஸிட் போல் முடிவுகள் மாநிலத்தையே உற்று நோக்க செய்திருக்கிறது. குறிப்பாக முதல் தேர்தலிலேயே விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளதை இந்த கணிப்புகள் காட்டுவதாகவே தவெக நம்புகிறது.
தமிழக அரசியல்ல நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கான அறிகுறி தென்படுவதாக ஆக்சிஸ் மை இந்தியா வெளியிட்டுள்ள 2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. விஜயனுடைய தமிழக வெற்றி கழகம் தனது தனி முதல் தேர்தலிலேயே ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு மிகப்பெரிய பலத்துடன் உருவெடுக்கும் என்றும் 120 தொகுதிகள் வரை வெல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: “தவெக 200 தொகுதிக்கு மேல் வெல்லும்...” - பகல் கனவு காண்கிறாரா செங்கோட்டையன்... கோவையில் பரபரப்பு பேட்டி...!