×
 

தவெக முதுகில் சவாரி செய்ய முடிவெடுத்த காங்கிரஸ்... முதல் சந்திப்பிலேயே விஜயிடம் ராகுல் வைத்த ஷாக்கிங் டீல்...!

காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்களை தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் சந்தித்து பேசியுள்ளார்.

டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்தித்துள்ளார். கடந்த முறை முதலமைச்சர் விஜயின் டெல்லி பயணத்தின்போதே இந்த சந்திப்பு திட்டமிடப்பட்டிருந்ததாக கூறப்பட்டது. ஆனால் அப்போது அது நடைபெறவில்லை. இந்த முறை அவர் காங்கிரஸ் மூத்த தலைவர்களை நிச்சயமாக சந்திப்பார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. டெல்லியில் மிக முக்கியமான அரசியல் சந்திப்பு தற்போது நடைபெற்றுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்களை தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் சந்தித்து பேசியுள்ளார்.

சோனியா காந்தியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. கடந்த சுமார் அரை மணி  நேரத்திற்கும் மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றது. கடந்த மே 27-ஆம் தேதி முதல்முறையாக டெல்லி வந்தபோதே முதலமைச்சர் விஜய் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேசுவார் என தகவல்கள் வெளியானது. ஆனால், அந்த சந்திப்பு நடைபெறவில்லை.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டபோது, கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் மாற்றம் தொடர்பான பணிகள் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களவைத் தேர்தல் தொடர்பான பணிகளில் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்ததால் சந்திப்பு நடைபெறவில்லை என்றும், அடுத்த முறை விஜய் டெல்லி வரும்போது அந்த சந்திப்பு நிச்சயமாக நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: “நான் இல்லாமல் கூட்டத்தை நடத்திடுவியா நீ...” - காங்கிரஸ் கனவில் கல்லைப் போட்ட திமுக... பரபரப்பான டெல்லி...!

அதன்படி, தற்போது நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி வந்துள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய், காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். ஏற்கனவே ராகுல் காந்தியை அவர் பதவியேற்பு நிகழ்வின் போது சந்தித்து பேசியிருந்தாலும், சோனியா காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பின்போது, தமிழக அரசியல் சூழல் மற்றும் தேசிய அரசியல் நிலவரம் குறித்து விரிவாக விவாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, இந்தியா கூட்டணியில் தவெக இணைப்பது தொடர்பாக ராகுல் காந்தி, முதலமைச்சர் விஜயிடம் முறையான முன்மொழிவு ஒன்றை வைத்ததாக கூறப்படுகிறது. ஏனெனில், தவெகவை இந்தியா கூட்டணியில் இணைக்க வேண்டும் என்ற விருப்பத்தில் ராகுல் காந்தி தொடர்ந்து ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

மேலும், தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது தவெக மற்றும் காங்கிரஸ் இணைந்து செயல்பட்டு வரும் கூட்டணியை அப்படியே தொடர வேண்டும் என்றும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் அடுத்த மக்களவைத் தேர்தலையும் இணைந்து சந்திக்க வேண்டும் என்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இரு தரப்பினரும் விரிவாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
 

இதையும் படிங்க: காங்கிரஸ் இன்று நம்மை கைவிட்டுவிட்டது..!! டெல்லியில் ராகுலுக்கு எதிராக பரபரப்பு போஸ்டர்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share