திமுக மாவட்ட செயலாளர் டு மாநிலங்களவை எம்.பி.... யார் இந்த எஸ்.ஆர்.சிவலிங்கம்?
எஸ்.ஆர்.சிவலிங்கம் ஏற்கனவே கடந்த 1989-91 , மற்றும் 96 முதல் 2000 வரை பனமரத்துப்பட்டி சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறை இருந்தவர்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதல்படி வாழ்நாள் முழுவதும் நடந்து கொள்வேன் என மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்றுள்ள சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.
திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியிடும் வாய்ப்பினை சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ் ஆர் சிவலிங்கம் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கியுள்ளார். இந்நிலையில் எஸ்.ஆர்.சிவலிங்கம் அவர்களுக்கு கட்சி நிர்வாகிகள் பலரும் அவரது இல்லத்தில் தற்போது வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஸ்டாலின் குரலாக எதிரொலிப்பேன்:
இதனிடையே எஸ் ஆர் சிவலிங்கம் கூறும் போது, திமுகவில் உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும் என்பதற்கு ஏற்ப ஒரு தொண்டனுக்கு தலைவர் ஸ்டாலின் அவர்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளார். கட்சியில் 40 ஆண்டு காலமாக பணியாற்றி வருகிறேன். தலைவர் என்ன சொல்கிறாரோ, அவர் வழிகாட்டுதல் படி தட்டாமல் செயல்படுவேன். அவர் என்ன நினைக்கிறாரோ அதன்படி நான் செயல்படுவேன். தலைவர் ஸ்டாலின் என்ன சொல்கிறாரோ, அவரது குரலை அப்படியே நாடாளுமன்றத்தில் ஒலிப்பேன் என்றும், நான் கட்சிக்கு என்றும் விசுவாசமாக உயிர் உள்ளவரை இருப்பேன் எனக்கு இந்த அங்கீகாரம் வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இதையும் படிங்க: முதல்வர் வழிகாட்டுதலில் உங்கள் குரல் ஒலிக்கட்டும்! ராஜ்யசபா திமுக வேட்பாளர்களை வாழ்த்திய உதயநிதி...
யார் இந்த எஸ்.ஆர். சிவலிங்கம்?
எஸ்.ஆர்.சிவலிங்கம் ஏற்கனவே கடந்த 1989-91 , மற்றும் 96 முதல் 2000 வரை பனமரத்துப்பட்டி சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறை இருந்தவர்.
கடந்த 2012 முதல் 2015 ம் ஆண்டு வரை ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்தவர்.
2020 ஆம் ஆண்டு முதல் சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்து வருகிறார்.
அதிமுகவில் இருந்து கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒருவரை எடப்பாடி பழனிசாமி மாநிலங்களவை தேர்தலில் களமிறக்கக்கூடும் என்ற செய்தி காத்து வாக்கில் கசிந்துள்ளது. இதனையடுத்தே எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியில் இருக்கக்கூடிய ஒருவரை ஸ்டாலின் களமிறக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னையில் கொரோனாவால் ஒருவர் பலி! பொதுமக்கள் கலக்கம்...