×
 

கரூர் டு கோவைக்கு மாறிய செந்தில் பாலாஜி... எஸ்.பி.வேலுமணி, அண்ணாமலை, வானதிக்கு காத்திருக்கும் ஆப்பு...!

இறுதியில் அந்த வதந்தியையே உண்மையாக்கி கோவைக்கு சென்றிருப்பது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மக்கள் என் மக்கள்; கரூர் தொகுதியில்தான் போட்டியிடுவேன், கோவைக்கு செல்வேன் என்பவை எல்லாம் வதந்திகள் என்று கூறிய செந்தில் பாலாஜி, இறுதியில் அந்த வதந்தியையே உண்மையாக்கி கோவைக்கு சென்றிருப்பது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் பயணத்தின் தொடக்கம்:

1996ஆம் ஆண்டு கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் மண்மங்கலம் கிராமத்தில் வார்டு உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய செந்தில் பாலாஜி, 2001ஆம் ஆண்டு கவுன்சிலராக உயர்ந்தார். 2006ல் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக சார்பில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக எம்எல்ஏ ஆனார். 2011ஆம் ஆண்டு அமைச்சராக பதவி வகித்தார். அதன் பின்னர் அவரது அரசியல் வளர்ச்சி வேகமடைந்தது.

அவர் எந்தக் கட்சியில் இருந்தாலும் தலைமைக்கு நெருக்கமாக இருப்பதே அவரது அரசியல் நுண்ணறிவு என கூறப்படுகிறது.

கரூரில் இருந்து கோவைக்கு – ஏன் மாற்றம்?

கோவையில் திமுகவுக்கு வலுவான இரண்டாம் கட்ட தலைமை இல்லாத சூழலில், அந்த இடத்தை நிரப்பவே செந்தில் பாலாஜி நகர்ந்ததாக கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகளில் எஸ்.பி. வேலுமணி, வானதி சீனிவாசன், அண்ணாமலை போன்ற வலுவான தலைவர்கள் இருப்பதால், கோவை அரசியல் ரீதியாக முக்கியமான களமாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: கரூர் துயரம்... செந்தில் பாலாஜி சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்... கிடுக்கிப்பிடி விசாரணை..!!

திருச்சியில் கே. என். நேரு, திண்டுக்கல்லில் ஐ. பெரியசாமி போன்றோர் போல, கோவையிலும் ஒரு வலுவான திமுக முகம் தேவைப்பட்டதாக கூறப்படுகிறது.

திடீர் மாற்றமா? திட்டமிட்ட நடவடிக்கையா?

பலரும் இதை திடீர் முடிவாக பார்க்கவில்லை. மூன்று மாதங்களாகவே இந்த தகவல் வட்டாரங்களில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகள் தயாராகாமல் இருக்க “கொரில்லா அட்டாக்” போல இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

கட்சித் தலைமையின் ஆதரவு:

திமுக தலைமையான மு.க. ஸ்டாலின், சபரீசன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கொங்கு மண்டலத்தில் கட்சியை வலுப்படுத்த விரும்பியதும், இந்த மாற்றத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.

எதிர்க்கட்சியின் கணிப்பு: 

எதிர்க்கட்சிகள் இதை “தோல்வி பயம்” என விமர்சிக்கின்றன. கோவை தெற்கு தொகுதியில் தங்களுக்கான வாக்கு வங்கி உறுதியானது, அதை மாற்ற முடியாது என்கிறார்கள். மேலும் வடஇந்திய வாக்குகள், இந்து வாக்கு வங்கி, மற்றும் பிற சமூக அடிப்படைகள் ஆகியவை இந்த தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் கூறப்படுகிறது.

முடிவில் வெல்லப்போவது யாரு?

கரூரில் வேரூன்றி இருந்த அரசியல்வாதி, கோவை போன்ற பெரிய நகர அரசியலுக்குள் நுழைவது சாதாரண மாற்றம் அல்ல. இது எதிர்கால அரசியல் நிலைப்பாட்டை தீர்மானிக்கும் முக்கியமான நகர்வு என பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தேர்தல் வேலை இருக்கு...! சிபிஐக்கு தவெக தலைவர் விஜய் வைத்த முக்கிய கோரிக்கை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share