×
 

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: அமைச்சர் வன்னியரசு சகோதரி மீது வழக்குப்பதிவு; மேலாளர் கைது!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் உயிரிழந்த வழக்கில் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்; அமைச்சர் வன்னியரசுவின் சகோதரி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உரிமம் பெற்ற பட்டாசு ஆலையில் ஏற்பட்ட கோர வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த வழக்கில், ஆலையின் மேலாளரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் அமைச்சர் வன்னியரசுவின் சகோதரி மற்றும் அவரது மருமகள் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான பட்டாசு உற்பத்தி ஆலைகள் இயங்கி வரும் நிலையில், சாத்தூர் அருகேயுள்ள கிராமப் பகுதியில் செயல்பட்டு வந்த குறிப்பிட்ட ஒரு பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் வழக்கம் போல் உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, ரசாயனக் கலவை உராய்வு காரணமாக எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டது. வெடிபொருட்கள் அடுத்தடுத்துப் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில், ஆலையின் கட்டடப் பகுதி இடிந்து தரைமட்டமானது. இதில் பணியில் இருந்த தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறிப் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினரும் காவல்துறையினரும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு, உயிரிழந்த தொழிலாளியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையைத் தொடங்கினர்.

இதையும் படிங்க: தவெக நிர்வாகி கண்ணன் படுகொலை: அடையாறு துணை கமிஷனர், இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், பட்டாசு ஆலையின் மேலாளரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், பாதுகாப்பு விதிமுறைகளை மீறியது மற்றும் உயிரிழப்புக்குக் காரணமான கவனக்குறைவு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், ஆலை நிர்வாகத் தொடர்புடைய அமைச்சர் வன்னியரசுவின் சகோதரி மற்றும் அவரது மருமகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள அவர்கள் இருவரையும் கைது செய்யத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

 

 

 

இதையும் படிங்க: தலைநகரில் சட்டம் ஒழுங்கு எங்கே? தவெக பிரமுகர் கொலை விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share