ஏழைகளின் நலன் காத்த 10 ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை மறைவு...சோகத்தில் மூழ்கிய மக்கள்!
பட்டுக்கோட்டையை சேர்ந்த 10 ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை வயது மூப்பு காரணமாக காலமானார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள சீனிவாச புரத்தில் வசித்து வந்தவர் மருத்துவர் ரத்தினம் பிள்ளை. இவர் கடந்த 65 வருடங்களாக வெறும் பத்து ரூபாய் மட்டுமே வாங்கிக் கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி வந்தார்.
தன் பணியை தொடங்கும் போது இவர் 2 ரூபாய் கட்டணம் பெற்றுள்ளார். அதன்பின் 1997 ஆம் ஆண்டிலிருந்து 5 ரூபாய் கட்டணம் வாங்கியுள்ளார். பின் 2007 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை 10 ரூபாய் கட்டணமாக வசூலித்து வந்தார். இவர் பட்டுக்கோட்டையின் அதிசய டாக்டர் எனவும் அன்புடன் அழைக்கப்பட்டு வருகிறார்.
இதையும் படிங்க: மாஜி நக்சல்களுக்கு மாஸாக திருமணம்.. நேரில் சென்று வாழ்த்திய முதலமைச்சர்..!
இந்த நிலையில், 91 வயதான மருத்துவர் ரத்தினம் பிள்ளை உடல்நலக்குறைவால் காலமானார். ஏழை எளிய மக்களை காத்த ரத்தினம் பிள்ளையின் மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: உங்க விருப்பம் நிறைவேறும்...சூசகமாக காய் நகர்த்திய ராமதாஸ்!