தந்தையை இழந்த 10 ஆம் வகுப்பு மாணவன்.. மனம் தளராமல் தேர்வுக்கு சென்ற கலங்க வைக்கும் சம்பவம்..!!
சிவகங்கையில் தந்தையை இழந்த சோகத்திலும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத சென்ற மாணவனின் செயல் மனம் கலங்கச் செய்கிறது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனின் தந்தை இறந்ததால் அம்மாவின் கண்ணீரை துடைத்து விட்டு இறுதி காரியம் செய்து பரிட்சை எழுதிய மாணவனின் செயல் காண்கோடி கலங்கச் செய்தது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வேட்டையன்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன். இவருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளார்.
மகன் இளமாறன் சிங்கம்புணரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். சரவணன் தனியார் உணவு விடுதியில் புரோட்டோ மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.கடந்து சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த சரவணன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று இரவு அரசு மருத்துவமனையில் சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உடலை ஆம்புலன்ஸ் மூலம் சிங்கம்புணரி மயானத்திற்கு கொண்டுவரப்பட்டு மகன் இளமாறன் அப்பாவிற்கு இறுதி சடங்குகள் செய்தார். தொடர்ந்து இன்று ஆங்கில தேர்வு உள்ளதால் இறுதி சடங்கு செய்த உடன் தாய்க்கு ஆறுதல் கூறிவிட்டு கண்ணீரோடு அந்த மாணவன் தேர்வை எழுதினார்.
இதையும் படிங்க: அரசியல் தலைவர்களுக்கு குடும்ப ஒழுக்கம் முக்கியம்!! தவெக தலைவர் விஜயை சாடும் வைகோ!
தந்தையை இழந்து செய்வதறியாது தவித்த மாணவனுக்கு பள்ளிக்கு அழைத்துச் சென்று குறித்த நேரத்தில் தேர்வு எழுத சமுக ஆர்வலர்கள் உதவி செய்தனர். தேர்வு நேரத்தில் தாய், தந்தை போன்றோரை இழந்து, தேர்வு எழுத வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் ஏதேனும் மாற்று வழி செய்து கொடுத்தால் ஆறுதலாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: இனிமே ஆன்லைன் தான்..! புது ரூல்ஸ்... தேர்தல் பிரச்சாரத்துக்கு முக்கிய கட்டுப்பாடுகள்..!!