+1 மாணவி தற்கொலை முயற்சி! மன அழுத்தமா? போலீஸ் தீவிர விசாரணை..!
மானாமதுரையில் 11ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்து சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பதினோராம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்று உள்ளார். இன்று பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்து அவர் குதித்துள்ளார். பின்னர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மாணவி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மன அழுத்தத்தால் தற்கொலைக்கு முயற்சி செய்தாரா? மாணவியின் இந்த விபரீத முடிவுக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.