தமிழகமே அதிர்ச்சி... 15 டன் போலி - வேளாண் துறை உதவி இயக்குநர் அதிரடி உத்தரவு..!
தஞ்சையில் போலி உரக்கிடங்கிற்கு சீல் வைத்த வேளாண் துறை அலுவலர்கள் சீலை அகற்றி பூட்டை உடைத்து சோதனை நடத்தினர்.
தஞ்சையில் போலி உரம் தயாரித்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த குடோனை வேளாண் அதிகாரிகள் சீல் வைத்தனர் களிமண்ணை இயந்திரம் மூலம் மிகச்சிறியதாக உருட்டி டிஏபி உரத்திற்கு பதிலாக ஒஏபி உரம் என்று சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதி விவசாயிகளிடம் விற்பனை செய்தது தெரியவந்த நிலையில் இன்று அந்த போலி இருப்பு வைத்துள்ள தஞ்சை குடோன் சீல் வைக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் கடந்த 20ம் தேதி ஆட்டோவில் வைத்து உரம் விற்பனை செய்யப்பட்டு வந்தன. சந்தேகத்தின் பேரில் ஆட்டோவை மடக்கி உரத்தினை பறிமுதல் செய்து ஆய்வு செய்ததில் அந்த உரம் போலியானது என தெரிய வந்தது.இதனை அடுத்து உரம் விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: பாக்., பெண்ணுக்கு ராணுவ ரகசியங்கள் கசிந்தது எப்படி? கடற்படை ஊழியரை ஆட்டிப்படைத்த ஆன்லைன் மோகம்..!
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தஞ்சை மாவட்டம் வடக்கு வாசல் பகுதியில் உள்ள ஆனந்தராஜ் என்பவரது உரம் குடோனில் இருந்து எடுத்து வரப்பட்டு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனை அடுத்து வேளாண் உதவி இயக்குனர் தரக்கட்டுப்பாடு செல்வராஜ் தலைமையிலான வேளாண் அதிகாரிகள் போலி உரம் தயாரித்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனை சீல் வைத்தனர்.
மேலும் குடோனில் சுமார் ஐந்து டன் போலி உரம் இருப்பதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து போலி உரம் தயாரித்து விற்பனை செய்த ஆனந்தராஜை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு விவசாயிகள் வேளாண் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் போலி உரம் விற்பனையால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்
இதையும் படிங்க: மா விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் திமுக அரசு.. கடுமையாக சாடிய எல். முருகன்..!