×
 

கோவையில் மீண்டும் அதிர்ச்சி... 16 வயது சிறுமி மாயம்... விடிய, விடிய தீவிர தேடுதல் வேட்டை...!

கோவையில் 16 வயது சிறுமி மாயமானதாக வெளியாகியுள்ள தகவல் மிகப்பெரிய பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி. கோவையில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில் 11 ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் அடிக்கடி யாருடனோ பேசி வந்ததாகவும், அதனை தாய் கண்டித்த நிலையில் இரவு 7:30ரை மணி அளவில் வீட்டிலிருந்து திடீரென காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மாணவியை காணவில்லை என்பதால் அக்கம் பக்கத்திலும், நரத்தினகிரி காவல் நிலைய போலீசார் இரவு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கிறார்கள். 16 வயது சிறுமி கோவை மாவட்டத்தில் மாயமானதாக தகவல் கிடைத்திருக்கிறது.


இதற்கு முன்னதாக கோவை சூலூர் பகுதியைச் சேர்ந்த லேத் ஒர்க்ஷாப் தொழிலாளி ஒருவரின் 10 வயது மகள், தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அருகிலுள்ள மளிகை கடைக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர் சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமல் மயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால், இது குறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அடுத்த சில மணி நேரங்களிலேயே சிறுமி கண்ணம்பாளையம் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

சிறுமியின் உடலை மீட்ட போலீசார், உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த மர்ம மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். முதற்கட்டமாக, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, மளிகை கடைக்குச் சென்ற சிறுமியை நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றது தெரியவந்தது. அதன் அடிப்படையில், சந்தேகத்தின் பேரில் இரண்டு நபர்களை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்தது தெரியவந்தது. குறிப்பாக கல்லால் அடித்து சிறுமி முகத்தை சிதைத்தும், கை, கால்களை உடைத்தும், சிறுமியின் தலைமுடியை வைத்தே அவரை கழுத்தை நெறித்துக் கொன்றதாக குற்றவாளி கொடுத்த வாக்குமூலம் தமிழ்நாட்டையே கொந்தளிக்க வைத்துள்ளது. 

இந்த சம்பவத்தின் சூடு கூட ஆறாத நிலையில், தற்போது மீண்டும் ஒரு சிறுமி மாயமாகியிருப்பது கோவை மக்களை திடுக்கிட வைத்துள்ளது. 

 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share