×
 

வரலாற்றில் முதல்முறை..!! 4 IAS அதிகாரிகள் தமிழக அரசின் செய்தி தொடர்பாளராக நியமனம்..!

தமிழக அரசு வரலாற்றில் முதல்முறையாக, 4 செய்தித் தொடர்பாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள், தேவையான துறைகளில் செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக அரசு நியமித்துள்ளது. இது போல் செய்தித் தொடர்பாளர்களை அரசு நியமிப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்பாளர்களாக நான்கு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்: ஜே. ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ்குமார், மற்றும் பி. அமுதா. இவர்கள் அரசின் அறிவிப்புகள், திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்களுக்கு திறம்பட தெரிவிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளனர். குறிப்பாக 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தகவல் பரப்புதலை ஒழுங்குபடுத்துவதற்காக இந்நியமனம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பரந்தூர் ஏர்போர்ட்டுக்கு கிரீன் சிக்னல்.. 5 கிராம மக்கள் சம்மதம்.. தமிழக அரசு தீவிரம்..!

1. டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன்: ஐஏஎஸ், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் - இவருக்கு ஒதுக்கப்பட்ட துறைகள்: 

எரிசக்தித் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, போக்குவரத்துத் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, வெளிநாடு வாழ் தமிழர் நலன், பள்ளிக் கல்வித் துறை, உயர்கல்வித் துறை, கைத்தறி மற்றும் கதர்த் துறை, மனிதவள மேலாண்மைத் துறை

2. ககன்தீப் சிங் பேடி: ஐஏஎஸ், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் - இவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள்:

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, நீர்வளத் துறை, சுற்றுச் சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை, இயற்கை வளங்கள் துறை

3. தீரஜ் குமார்: ஐஏஎஸ், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் - இவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள்:

உள் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை

4.பெ. அமுதா: ஐஏஎஸ், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் - இவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள்:

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை
 

இதையும் படிங்க: பிளாஸ்டிக் தடை பின்பற்றப்படுகிறதா..? தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரைக்கிளை போட்ட உத்தரவு என்ன..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share