×
 

விடிந்ததுமே அடுத்தடுத்து அதிர்ச்சி... 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... காமுகன் மீது பாய்ந்தது போக்சோ...!

பூந்தமல்லி அருகே 7 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்: ஒருவர் மீது போக்சோ வழக்கு பதிவு

சென்னை பூந்தமல்லி அருகே உள்ள காட்டுப்பாக்கம் பகுதியில், 7 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தம்பதியரின் 7 வயது மகள், அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று சிறுமி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய சரவணன் என்ற நபர் சிறுமியை அருகிலுள்ள பகுதியில் அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: இன்ஸ்டாகிராமால் வந்த வந்த வினை... +2 மாணவியைக் கடத்தில் பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளி போக்சோவில் கைது...!

பின்னர், சிறுமி அழுதபடி வீட்டிற்கு திரும்பிய நிலையில், பெற்றோர் விசாரித்தபோது சம்பவம் குறித்து தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் அடிப்படையில் பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, குற்றச்சாட்டுக்குள்ளான சரவணனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், சரவணன் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பேமா தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: “இனி அதிமுகவே இருக்காது...”... மேடையில் படு ஓபனாக இபிஎஸ் பெயரைச் சொல்லி தெறிக்கவிட்ட செங்கோட்டையன்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share