தமிழகத்தில் நாளை இங்கு பேருந்துகள் ஓடாது.. வெளியானது பரபரப்பு அறிவிப்பு..!
தாராபுரத்தில் நாளை பஸ் ஸ்ட்ரைக் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து திண்டுக்கல் கொடைக்கானல் ஈரோடு திருப்பூர் கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டன. குறிப்பாக நேற்று இரவு ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து தாராபுரம் நோக்கி செல்லும் அரசுப்பேருந்தை கணேசன் என்பவர் இயக்கி உள்ளார்.
அப்போது தாராபுரம் செல்வதற்கு பயணிகள் நீண்ட நேரமாக பேருந்தில் பயணிகள் ஏறி அமர்ந்திருந்த சூழலில் அதிகாரிகள் உத்தரவின்றி பேருந்தை எடுத்து செல்ல முடியாது என பேருந்து ஓட்டுநர் கணேசன் தெரிவித்ததாகவும், மேலாளரிடம் அனுமதி வாங்கி வர பயணிகளிடம் கணேசன் சொல்லியதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக பேருந்து மேலாளர் மாரிமுத்து பயணிகளை தூண்டி விடுகிறாயா எனக்கூறி செருப்பால் அடித்துள்ளார்.
இதையும் படிங்க: நாங்களும் ரெடி! ராஜ்ய சபா சீட்டுக்கு சுயேட்சைகள் போட்டா போட்டி...
வாக்குவாதம் ஏற்பட்டு ஓட்டுநர் கணேசனை உதவி மேலாளர் மாரிமுத்து செருப்பை கழட்டி அடித்ததை அங்கிருந்த பயணிகள் வீடியோ எடுத்து நிலையில் அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து ருந்து நிலைய உதவி மேலாளர் மாரிமுத்து ஓட்டுனரை அடித்த காரணத்திற்காக மாரிமுத்துவை தற்காலிக பணிநீக்கம் செய்து மதுரை மண்டல போக்குவரத்து நிர்வாக இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டார்.
இதனிடையே, தாராபுரத்தில் அரசு போக்குவரத்து கழகம் முன்பு போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் சங்கத்தினர் பாரிமுத்து உட்பட நான்கு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாரிமுத்து தாராபுரம் போக்குவரத்து தொழிலாளர்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி 200க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நாளை காலை 6 மணி முதல் (செவ்வாய்க்கிழமை) கோவைக்கோட்டை தாராபுரம் கிளையை சேர்ந்த 81 அரசு பேருந்துகளும் இயங்காது என போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்ல பேச முடியலையாம்!! டிராமா போடும் அமித்ஷா.. வச்சு செய்யும் செல்வப்பெருந்தகை..!