×
 

என் வீட்டு தென்னை கூனி எதிர்வீட்டுக்கு இளநீர் தந்தால் பெயர் என்ன..? ஆ.ராசா வார்த்தைப் போர்..!

விசிக மற்றும் IUML கட்சிகளை ஆ. ராசா கடுமையாக விமர்சித்து வருகிறார்.

தமிழ் இலக்கியத்தில் முடத்தெங்கு என்பது ஒரு சக்திவாய்ந்த உருவகம். சொந்தத் தோட்டத்தில் வளர்ந்த தென்னை மரம், காய்களைத் தன் எஜமானுக்கு கொடுக்காமல், கூனி வளைந்து எதிர் வீட்டுக்கு இளநீர் தரும் துரோகப் பண்பை இது குறிக்கும். இந்தப் படிமம் துரோகம், நன்றி கெட்ட தன்மை, சுயநலம் ஆகியவற்றை அழகாகச் சித்தரிக்கும். திமுக எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா இந்த உருவகத்தை அரசியல் களத்தில் பயன்படுத்தி, தற்போதைய தமிழ்நாட்டு அரசியல் நிகழ்வுகளை கடுமையாக விமர்சித்துள்ளார். 

சமீபத்தில் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்து, தங்கள் எம்.எல்.ஏ.க்களை அமைச்சர்களாக இணைத்துக் கொண்டன. இந்த நடவடிக்கை DMK கூட்டணியில் தேர்தலை எதிர்கொண்ட இந்தக் கட்சிகளின் “திடீர் தாவல்” ஆகக் கருதப்பட்டது. இதற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தவர் ஆ.ராசா. 

ஆ.ராசா தனது எக்ஸ் பக்கத்தில் முன்பு , “முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’ மூட சாதியை நொறுக்க வேண்டிய ‘சிறுத்தையும்’ வெறும் ‘விசில்’ சத்தத்திற்கு முட்டுக் கொடுக்குமென்றால்; பூ முடித்தவனை புறந்தள்ளி., புணர்ச்சிக்கு வேறிடம் தேடுவதில் தவறில்லை!” என்று கூறி இருந்தார்.

இதையும் படிங்க: அமைதியா போறது.. அநாகரீகம் தவிர்க்க தான்..! ஆ. ராசாவை பூந்து விளாசிய S.S. பாலாஜி..!

தற்போது மேலும் பல கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். என் வீட்டுத் தோட்டத்துத் தென்னை கூனி வளைந்து எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில் அதற்குப் பெயர் ”முடத்தெங்கு” என்றும் அரசியலில் என்ன பெயர் சூட்டலாம் எனவும் கேள்வி எழுப்பினார். 

இதையும் படிங்க: ஏணியும், சிறுத்தையும் விசிலுக்கு முட்டுக் கொடுக்குது...! ஆ.ராசா விமர்சனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share