போதை பொருள் வழக்கு.. ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவை தொடர்ந்து இளம் பெண் கைது.. யார் அவர்?
போதைப் பொருள் விநியோக வழக்கில் ஸ்ரீகாந்த் தொடர்புடைய நபர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது ஒரு இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையை தடுக்க அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த 17-ம் தேதி இரவு சந்தேகத்தின்பேரில் இளைஞர் ஒருவரை பிடித்து நுங்கம்பாக்கம் போலீஸார் விசாரித்தனர். அவர் வைத்திருந்த பையில் 11 கிராம் போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீஸார், இதை வைத்திருந்த சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த பிரதீப் குமார் என்ற பிரடோவை கைது செய்தனர்.
அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பிரபல நடிகரான ஸ்ரீகாந்தை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து நுங்கம்பாக்கம் போலீஸார் காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். மேலும் ஸ்ரீகாந்தின் ரத்த மாதிரி பரிசோதிக்கப்பட்டது. இதில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்ரீகாந்தை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கழுகு படத்தில் நடித்து பிரபலமான நடிகர் கிருஷ்ணாவுக்கும் போதைப்பொருள் வழக்கில் தொடர்பு இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியானதை அடுத்து, நடிகர் கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: சூடு பிடிக்கும் போதை பொருள் வழக்கு... அடுத்தடுத்து சிக்கும் பிரபலங்கள்... நடிகர் ஸ்ரீகிருஷ்ணாவுக்கு சிறை!!
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் கிருஷ்ணாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, நடிகர் கிருஷ்ணா, கெவினை ஜூலை 10ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மருத்துவ பரிசோதனை முடிந்து நடிகர் கிருஷ்ணா, கெவின் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
போதைப் பொருள் விநியோக வழக்கில் ஸ்ரீகாந்த் தொடர்புடைய நபர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது ஒரு இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சூளைமேடு காவல்துறையினர் ஸ்ரீகாந்த் தொடர்புடைய இந்த போதைப் பொருள் வழக்கில் இதுவரை 25 நபர்களைக் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் நைஜீரியாவைச் சேர்ந்த ஒரு இளம் பெண் கைது செய்யப்பட்டிருப்பது இந்த வழக்கில் புது திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நான் அவன் இல்லை...கொக்கைன் குற்றச்சாட்டை மறுக்கும் நடிகர் கிருஷ்ணா…