×
 

நான் சான்றிதழை காட்டுவேன்! மோடி காட்டத் தயாரா?! அமெரிக்க படிப்பு பணம் எங்கிருந்து வந்தது? அபிஜீத் தீப்கே பதில்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே, தனது அமெரிக்க கல்விக்கான உதவித்தொகை மற்றும் கல்விக் கடன் ஆவணங்களை வெளியிடத் தயார் என தெரிவித்துள்ளார். இதற்கு பதிலாக பாஜக தலைவர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்களை வெளியிட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்டம் நடத்திய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே, தனது அமெரிக்க கல்வி தொடர்பான நிதி விவரங்களை வெளியிடத் தயார் என தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், பாஜக தலைவர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்களை வெளியிட தயாரா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் பின்னர் அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியதாக அந்த அமைப்பு தெரிவித்தது.

வேலையில்லாத இளைஞர்களை குறிக்கும் வகையில் ‘கரப்பான்பூச்சி’ என்ற பெயரில் அமைப்பை உருவாக்கிய அபிஜீத் தீப்கே, இந்த போராட்டத்தின் மூலம் தேசிய அளவில் கவனம் பெற்றார். அவர் மகாராஷ்டிராவின் புனேவில் இதழியல் படித்ததுடன், அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்புத்துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.

இதையும் படிங்க: அபிஜித் தீப்கே யார்? அமெரிக்க படிப்பு, அரசியல் பயணம் குறித்து தீவிர விசாரணை! RTI மூலம் புதிய கேள்வி!

இதற்கிடையில், குஜராத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் அமித் திவாரி, அபிஜீத் தீப்கேவின் வெளிநாட்டு கல்விக்கான நிதி ஆதாரம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது குடும்ப பொருளாதார பின்னணி மற்றும் அமெரிக்க கல்விக்கான செலவு எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து தகவல் கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் அபிஜீத் தீப்கே தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து கல்வி உதவித்தொகை பெற்றதாகவும், தனது படிப்புக்காக கல்விக் கடன் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த கல்விக் கடன் தொடர்பான ஆவணங்கள் மற்றும் உதவித்தொகை தொடர்பான கடிதங்களை வெளியிட தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தனது கல்வி தொடர்பான விவரங்களை விசாரிக்க யாருக்கும் உரிமை இருப்பதாக தெரிவித்த அவர், அதேபோல் அரசியல் தலைவர்களும் தங்களது கல்வி விவரங்களை வெளிப்படையாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார்.

அபிஜீத் தீப்கே வெளியிட்டுள்ள இந்த கருத்து தற்போது அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது கல்வி நிதி தொடர்பான கேள்விகளும், அவர் முன்வைத்துள்ள அரசியல் சவாலும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.

இதையும் படிங்க: அபிஜித் தீப்கே யார்? அமெரிக்க படிப்பு, அரசியல் பயணம் குறித்து தீவிர விசாரணை! RTI மூலம் புதிய கேள்வி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share