கோர விபத்து..! சம்பவ இடத்திலேயே பலியான 2 தம்பதிகள்..! எட்டயபுரத்தில் சோகம்..!
எட்டயபுரம் அருகே நிகழ்ந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய போது ஏற்பட்ட விபத்தில் இரண்டு தம்பதிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே நின்று லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று திரும்பிய நான்கு பேர் உயிரிழந்தனர். விபத்தில் சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பாஸ்கரன் வனிதா, வசந்தி, கார் ஓட்டுநர் பழனி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
எம் கோட்டூர் விளக்கு அருகே நிகழ்ந்த விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் பலியான துயரச்சம்பவம் ஏற்பட்டுள்ளது இதில் இரண்டு சிறார்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். காரில் இருந்த பழனி, பாஸ்கரன், வனிதா, வசந்தி ஆகியோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
விபத்தில் பலியான பாஸ்கரனின் பிள்ளைகள் சந்தியா மற்றும் பிரதீப் குமார் ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காரை ஓட்டி வந்த பழனி உரக்க கலக்கத்தில் லாரி மீது மோதியதாக கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்ததும் அங்கு சென்ற போலீசார் உயிரிழந்த நான்கு பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் சோக சம்பவம்: கிணற்றில் பாய்ந்த கார்..!! குழந்தைகள் உள்பட 9 பேர் பரிதாப பலி..!!
காயமடைந்த இரண்டு சிறார்கள் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று தரிசனம் முடித்துவிட்டு வீடு திரும்பிய போது ஏற்பட்ட இந்த கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அது மட்டும் அல்லாமல் தாய், தந்தை இருவரும் இந்த விபத்தில் வலியான நிலையில் இரண்டு பிள்ளைகள் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: திருவள்ளூரில் நேர்ந்த துயரம்... அரசு பேருந்து மீது கார் மோதி தம்பதி பலியான சோகம்..!!